இடமாறுதலாகி செல்லும் வால்பாறை காவல் ஆய்வாளருக்கு பிரிவு உபச்சார விழா!

வால்பாறை காவல் நிலைய ஆய்வாளராக இருந்த கற்பகம் இடமாறுதலாகி, வேறு இடத்திற்கு செல்லவுள்ள நிலையில், அவருக்கு காவல்நிலையத்தில் பிரிவு உபச்சார விழா நடைபெற்றது. இந்த விழாவில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் நகராட்சி தலைவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


கோவை: வால்பாறை காவல் நிலைய ஆய்வாளருக்கு அதிகாரிகள் மற்றும் சக காவலர்கள் இணைந்து பிரிவு உபச்சார விழா நடத்தப்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறை காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் கற்பகம். இவர், சுமார் 1 வருடம் 8 மாதங்கள் வால்பாறை காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.



இந்நிலையில், தற்போது மேட்டுப்பாளையம் காவல் நிலையத்திற்கு இடம் மாறுதல் நிமித்தம் செல்வதால் பிரிவு உபச்சார விழா நடைபெற்றது.

வால்பாறை டி.எஸ்.பி கீர்த்தி வாசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், வால்பாறை நகராட்சி நகர மன்ற தலைவர் அழகு சுந்தரம். வார்டு உறுப்பினர்கள், பத்திரிக்கையாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



காவல் ஆய்வாளர் கற்பகம் வால்பாறை பகுதியில் போதைப்பொருள் தடுப்பு மற்றும் கஞ்சா தடுப்பு நடவடிக்கையாக சிறு பள்ளி கூடத்தில் இருந்து கல்லூரி வரை பொதுமக்கள் ஒவ்வொருவருக்கும் கஞ்சா தடுப்பு நடவடிக்கை விழிப்புணர்வு ஏற்படுத்தியவர்.



மேலும் பெண்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வண்ணம் மனநிலை ஆலோசனையும் வழங்கி உள்ளார். இதனால் வால்பாறை பகுதியில் தற்கொலை போன்ற செயல்பாடுகளை தவிர்க்கும் வண்ணம் செயல்பட்டு வந்துள்ளார்.

மேலும் சுமார் 91 பள்ளிகளுக்கு நேரில் சென்று ஆசிரியர்கள் பள்ளி குழந்தைகள் என்று பல்வேறு வகையான ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார், இதனால் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடைப்பட்ட கருத்து வேறுபாடுகளை தவிர்த்து குழந்தைகள் நன்கு படிக்கும் வண்ணம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்துள்ளார்.



தற்பொழுது இவர் இடமாற்றமாகி செல்வதால் வால்பாறை காவல் நிலைய அதிகாரிகளும் பொதுமக்களும் பிரிவு உபச்சார விழாவில் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை துப்பாக்கி சூடு வீரர்கள் 168 பதக்கங்கள் வென்று சாதனை

சென்னையில் நடைபெற்ற 51வது மாநில அளவிலான ரைபிள், பிஸ்டல் துப்பாக்கி சூடு போட்டியில் கோவை வீரர்கள் 168 பதக்கங்களை வென்றனர்...

கோவை குனியமுத்தூர் அருகே ஜவுளிக்கடை மேலாளருக்கு கத்திக்குத்து; தொழிலாளி கைது

கோவை குனியமுத்தூர் அருகே ஜவுளிக்கடை மேலாளரை கத்தியால் தாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். படுக...

கோவை மாநகராட்சி ஆணையர் மத்திய மண்டல தூய்மைப் பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மத்திய மண்டலத்தின் வார்டு 48ல் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்து, தூய்மைப் பணியாளர்களுக...

ஒண்டிப்புதூரில் ரயில்வே மேம்பாலம் அமைக்கக் கோரி மக்கள் போராட்டம்; கிழக்கு மண்டல அலுவலகம் முற்றுகை

கோவை ஒண்டிப்புதூர் சூர்யா நகர் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் சிங்காநல்லூர் கிழக்கு...

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...