மதுபாட்டில்களை டாஸ்மாக்கிலேயே திரும்ப பெறும் திட்டம் - கோவையில் இன்று முதல் அமல்!

கோவை மாவட்டத்தில் காலி மதுபான பாட்டில்களை டாஸ்மாக் கடைகளிலேயே திரும்பப்பெறும் திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. மதுபான பாட்டில்களை திரும்பப் பெரும் திட்டம் வரவேற்கத்தக்கது என சுற்றுச்சூழல் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் காலி மதுபான பாட்டில்களை டாஸ்மாக் கடைகளிலேயே திரும்பப்பெறும் திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் பொது இடங்களில் வீசப்படும் மதுபான பாட்டில்களால் இயற்கை சூழல் மற்றும் வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுவதை கருத்தில் கொண்டு டாஸ்மாக் மதுபான பாட்டில்களை திரும்ப பெரும் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டது.

இந்த திட்டம் நீலகிரி மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பிற மாவட்டங்களிலும் காலி மதுபாட்டல்களை பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியது.

இந்த நிலையில் ஏப்ரல் ஒன்றாம் தேதியான இன்று முதல் கோவை மாவட்டத்தில் காலி மதுபான பாட்டில்களை திரும்ப பெரும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி இன்று முதல் மதுபான கடைகளில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்களுக்கு கூடுதலாக பத்து ரூபாய் பெறப்படும் இதற்கான ஸ்டிக்கர் மது பாட்டிலிலேயே ஒட்டப்பட்டு விற்பனை செய்யப்படும். காலி மதுபான பாட்டில்களை மீண்டும் டாஸ்மாக் கடைகளில் கொடுத்து பத்து ரூபாயை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.

பொள்ளாச்சி மற்றும் வால்பாறை பகுதிகளில் உள்ள மதுபான கடைகளில் ஸ்டிக்கர் ஓட்டப்பட்ட காலி மதுபாட்டில்களை மீண்டும் டாஸ்மாக் கடைகளில் ஒப்படைத்து மது பிரியர்கள் பத்து ரூபாய் பணத்தை திரும்ப பெற்று செல்கின்றனர்.

இத்திட்டத்தை பற்றி சுற்றுச்சூழல் அமைப்பை சேர்ந்த சதாம் கூறியதாவது, கோவை மாவட்டத்தில் அதிகளவில் சுற்றுலா தளங்கள் உள்ளது. குறிப்பாக பொள்ளாச்சி, வால்பாறை, ஆழியாறு மற்றும் டாப்சிலிப் பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.

இந்த சுற்றுலா தலங்கள் அனைத்தும் வனப்பகுதியை சார்ந்து உள்ளதால் வனவிலங்குகள் அதிகளவில் காணப்படுகிறது. சுற்றுலா பயணிகளுக்கு போதிய விழிப்புணர்வு, வனத்துறையினர் சார்பில் கொடுக்கப்பட்டு இருந்தாலும் சுற்றுலா பயணிகள் கண்டு கொள்ளாமல் வனப்பகுதியில் மது பாட்டில்களை வீசி வருகின்றனர்.

இதனால் யானை மற்றும் மற்ற வன விலங்குகளுக்கு மது பாட்டில்களால் பெரும் ஆபத்து ஏற்பட்டு உயிரிழக்க நேரிடும் அபாயம் உள்ளது. தற்போது மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தால் சுற்றுலா பயணிகள் மற்ற இடங்களில் வீசாமல் வருவதற்கு வாய்ப்புள்ளது.



பாட்டில்களை திரும்பத் திரும்ப திட்டம் வரவேற்கத்தக்க உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...