திருப்பூரில் ஆட்டோ ஓட்டுநரை கொலை செய்த வழக்கில் இருவர் கைது!

திருப்பூரில் நண்பர்களிடையே ஏற்பட்ட தகராறில் நண்பரை தாக்குவதை தட்டிக்கேட்ட ஆட்டோ ஓட்டுநர் மணிகண்டன் என்பவரை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் அருகே ஆட்டோ ஓட்டுனரை கத்தியால் குத்திக் கொலை செய்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் அடுத்த கொங்கு மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் அதே பகுதியில் ஆட்டோ ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார். இதனிடையே இவரது நண்பர் சக்திவேலுக்கும் அவரது, நண்பர்களான மாரியப்பன் மற்றும் முனியசாமி இருவரிடம் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்து வந்துள்ளது.

இதனிடையே கடந்த மூன்று நாட்களுக்கு முன் சக்திவேலிடம், மாரியப்பன், முனியசாமி இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கைகலப்பாக மாறியது. இதையடுத்து மணிகண்டன் மூன்று பேரிடமும் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி மோதலை தடுத்து நிறுத்தியுள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த மாரியப்பன் மற்றும் முனியசாமி ஆகிய இருவரும் தாங்கள் வைத்திருந்த கத்தியால் மணிகண்டனை குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த மணிகண்டனை மீட்டு அப்பகுதி மக்கள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று மணிகண்டன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.



இச்சம்பவம் தொடர்பாக திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரியப்பன் மற்றும் முனியசாமி ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நண்பனை தாக்க முயன்றதை தடுக்க முயன்ற ஆட்டோ ஓட்டுனர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...