திருப்பூரில் ஆட்டோ ஓட்டுநரை கொலை செய்த வழக்கில் இருவர் கைது!

திருப்பூரில் நண்பர்களிடையே ஏற்பட்ட தகராறில் நண்பரை தாக்குவதை தட்டிக்கேட்ட ஆட்டோ ஓட்டுநர் மணிகண்டன் என்பவரை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் அருகே ஆட்டோ ஓட்டுனரை கத்தியால் குத்திக் கொலை செய்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் அடுத்த கொங்கு மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் அதே பகுதியில் ஆட்டோ ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார். இதனிடையே இவரது நண்பர் சக்திவேலுக்கும் அவரது, நண்பர்களான மாரியப்பன் மற்றும் முனியசாமி இருவரிடம் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்து வந்துள்ளது.

இதனிடையே கடந்த மூன்று நாட்களுக்கு முன் சக்திவேலிடம், மாரியப்பன், முனியசாமி இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கைகலப்பாக மாறியது. இதையடுத்து மணிகண்டன் மூன்று பேரிடமும் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி மோதலை தடுத்து நிறுத்தியுள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த மாரியப்பன் மற்றும் முனியசாமி ஆகிய இருவரும் தாங்கள் வைத்திருந்த கத்தியால் மணிகண்டனை குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த மணிகண்டனை மீட்டு அப்பகுதி மக்கள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று மணிகண்டன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.



இச்சம்பவம் தொடர்பாக திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரியப்பன் மற்றும் முனியசாமி ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நண்பனை தாக்க முயன்றதை தடுக்க முயன்ற ஆட்டோ ஓட்டுனர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கவுண்டம்பாளையத்தில் டோக்கன் விநியோகம் சர்ச்சை: அதிமுகவினரிடம் இருந்து டோக்கன்கள் பறிமுதல்; வீடியோ வைரல்..!

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட துடியலூர் ரங்கம்மாள் காலனியில், எடப்பாடி பழனிச்சாமி புகைப்படத்துடன் கூடிய ரூ.10,000 மற்...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாட்டம்

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் DGP சைலேந...

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...