மேட்டுப்பாளையம் அருகே உணவகத்துக்குள் புகுந்து கணவன், மனைவி மீது தாக்குதல்! - பாஜக பிரமுகர்கள் மூவர் கைது!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தொழில்போட்டியில் உணவகத்தில் புகுந்து கணவன், மனைவி இருவர் மீது கொலை மிரட்டல் விடுத்து தாக்குதல் நடத்திய பாஜக பிரமுகர்களான பிரபு, ஞானசேகர், விஜயகுமார் 3 பேரை கைது செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தொழில்போட்டி காரணமாக உணவகத்திற்குள் புகுந்து கணவன் மனைவி மீது தாக்குதல் நடத்திய பாஜக பிரமுகர்கள் மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மேட்டுப்பாளையம் அருகே காரமடை - தோலம்பாளையத்தை சேர்ந்தவர் சரவணகுமார் (40). இவரது மனைவி கீதா (34). கணவன், மனைவி இருவரும் தோலம்பாளையம் சாலையில் உணவகம் நடத்தி வருகின்றனர். இந்த உணவகத்தில் விலை குறைவாகவும், தரமான பொருட்களை கொண்டு தயாரித்து உணவு வழங்கி வருகின்றனர்.

இவர்களது கடைக்கு அருகே வெள்ளியங்காடு பகுதியை சேர்ந்த பிரபு (34) என்பவர் உணவகம் நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று மதுபோதையில் இருந்த பிரபு தனது கடையில் வேலை பார்க்கும் காரமடையை சேர்ந்த ஞானசேகர் (54), விஜயகுமார் (52) ஆகியோருடன் சரவணகுமாரின் கடைக்கு சென்றுள்ளார்.

அங்கு அவர்களிடம் நீங்கள் எப்படி, நான் விற்பனை விட குறைவாக விற்கலாம் என கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும் அவர்களிடம் நீ எப்படி உணவகம் நடத்துகிறாய் என்று நான் பார்க்கிறேன் எனக்கூறி கொலை மிரட்டல் விடுத்து தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இதில் காயமடைந்த கணவன், மனைவி இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வீடு திரும்பினர். இதுகுறித்து சரவணகுமாரும், அவரது மனைவியும் காரமடை காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தம்பதியை தாக்கிய பாஜக பிரமுகர்களான பிரபு, ஞானசேகர், விஜயகுமார் 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...