உடுமலை அருகே கிடப்பில் போடப்பட்ட தரைமட்ட பாலம் கட்டும் பணி - வாகன ஓட்டிகள் அவதி!

உடுமலை அடுத்த கழுத்தறுத்தான் பள்ளம் பகுதியில் கழிவு நீர் கால்வாய் பணிகளால் தரைமட்ட பாலம் கட்டும் பணிகள் கிடப்பில் போடப்பட்டு உள்ளதாலும், அங்குள்ள பெரிய அளவிலான பள்ளத்தில் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் விழுந்து விபத்துக்குள்ளாக வாய்ப்புள்ளதாக வாகன ஓட்டிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தரைமட்ட பாலம் கட்டும் பணிகள் கிடப்பில் போடப்பட்டதால் கடும் அவதிக்குள்ளாவதாக வாகன ஓட்டிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

உடுமலை மத்திய பேருந்து நிலையத்தின் அருகே கழுத்தறுத்தான் பள்ளம் பகுதியில் கழிவு நீர் கால்வாய் பணிகளால், அப்பகுதியில் கட்டப்பட்டிருந்த தரைமட்ட பாலம் சேதம் அடைந்தது. இதனால் பொள்ளாச்சி- பழனி சாலையில் இருந்து இணைப்பு சாலைக்கு செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வந்தனர். மேலும் கழிவுநீர் செல்வதிலும் சிக்கல் ஏற்பட்டது.

இதையடுத்து தரைமட்ட பாலத்தை புதுப்பித்து தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன் பேரில் பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால் அதன் பின்பு பணி தொடர்ந்து நடைபெறாததால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது, நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிக்கு செல்வதற்கு இந்த சாலை பெரிதும் உதவிகரமாக இருந்து வருகிறது. இதில் கட்டப்பட்டிருந்த தரைமட்ட பாலம் சேதம் அடைந்ததை யொட்டி புதுப்பிக்கும் பணி கடந்த சில மாதத்துக்கு முன்பு தொடங்கப்பட்டது. அதன் பின்பு பணிகள் நடைபெறவில்லை.

இதன் காரணமாக ஆண்டாள் சீனிவாசன் லே அவுட், பெரியார் நகர், பழனியாண்டவர் நகர், ரயில் நிலையத்திற்கு செல்வதற்கு வேறு சாலை வழியாக சுற்றி செல்ல வேண்டிய சூழல் உள்ளது. அதுமட்டுமின்றி கழிவுநீர் கால்வாயில் தண்ணீர் செல்வதற்கு வழியில்லாமல் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து கால்வாய் ஓரத்தில் வசித்து வரும் பொதுமக்களுக்கு உடல் நலக்குறைபாடுகளை ஏற்படுத்தி வருகிறது.

பொள்ளாச்சி - பழனி தேசிய நெடுஞ்சாலை ஒட்டியவாறு பெரிய அளவில் குழி வெட்டப்பட்டு உள்ளதால் அந்தப் பகுதியை கடக்கும் போது வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். இதனால் நிலை தடுமாறி விபத்துகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளது. எனவே கழுத்தறுத்தான் பள்ளம் அருகே கிடப்பில் போடப்பட்ட தரைமட்ட பாலம் கட்டுமான பணியை விரைந்து முடிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...