நகராட்சி கடைகளில் அதிக வாடகை வசூல் - வால்பாறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்!

வால்பாறையில் நகராட்சிக்கு சொந்தமாக 300-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. கடைகளுக்கு அதிகப்படியான வாடகை வசூல் செய்வதால், கடைக்காரர்கள் கட்ட முடியாமல் தவிக்கின்றனர். இதை கண்டித்து வால்பாறை பழைய பேருந்து நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: வால்பாறையில் நகராட்சிக்கு சொந்தமான 300-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இதில் கடை வாடகை அதிகமாக உள்ளதால் வாடகை செலுத்த முடியாமல் வியாபாரிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஒரு ஆண்டுக்கு முன்பு வாடகை செலுத்தாத கடைகளுக்கு நகராட்சி நிர்வாகம் சீல் வைத்தது.

அதில்,ஒரு சில கடைகள் வாடகை பணத்தை செலுத்தி விட்டு கடையை மீண்டும் நடத்தி வருகின்றனர். மீதம் உள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல் வைத்து, தற்போதுவரை அவை திறக்கப்படாமல் உள்ளன.

தற்போது செயல்பட்டு கொண்டிருக்கும் கடைகளுக்கு இரண்டு மாதம் வாடகை செலுத்தாவிட்டல், நகராட்சி நிர்வாகம் உடனடியாக கடைகளுக்கு சீல் வைத்து வருகின்றனர். இதனால் வியாபாரிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.

கடைகளுக்கு அதிகப்படியான வாடகை வசூல் செய்வதால், கடைக்காரர்கள் கட்ட முடியாமல் தவிக்கின்றனர்.



மேலும், அகற்றப்பட்ட சாலையோர கடைகளுக்கு பதிலாக, நகராட்சி நிர்வாகத்தின் சார்பாக சீல் வைக்கப்பட்ட கடைகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வால்பாறை பழைய பேருந்து நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கட்சியின் செயலாளர் பரமசிவன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், 20க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அப்போது, சாலையோரம் ஆக்கிரமிப்பில் உள்ள கடைகளை அகற்ற வேண்டும், நகராட்சி கடைகளுக்குள் மழைக்காலங்களில் தண்ணீர் வருவதை சரி செய்து தர வேண்டும், கடை வாடகையை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...