தமிழக மக்களின் பாகுபலியே.. கழகப் பொதுச் செயலாளரே..! - கோவையில் ஈபிஎஸ்-க்கு கட்அவுட் வைத்த அதிமுகவினர்!

அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட நிலையில், கோவை விளாங்குறிச்சியில் அதிமுகவினர், எடப்பாடி பழனிசாமிக்கு பாகுபலி போன்ற கட் அவுட் வைத்துள்ளனர். அதில், தமிழக மக்களின் பாகுபலியே.. கழகப் பொதுச் செயலாளரே.. தங்களை வாழ்த்தி வணங்குகிறோம் என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளது.


கோவை: கோவை மாவட்டம் விளாங்குறிச்சி பகுதியில் அதிமுகவினர் பாகுபலி வேடத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கட் அவுட் வைத்துள்ளனர்.

அதிமுகவின் பொதுக்குழு தொடர்பான சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு அண்மையில் வெளியானது. அந்த தீர்ப்பில், கடந்தாண்டு ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து தீர்ப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்ட அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டது. அதன்படி, அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். பின்னர் அவர், அதிமுக பொதுச்செயலாளராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிலையில், அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றதை தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அதிமுகவினர் பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.



அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் விளாங்குறிச்சி பகுதி அதிமுகவினர் "தமிழக மக்களின் பாகுபலியே!! கழகப் பொதுச் செயலாளரே!!! தங்களை வாழ்த்தி வணங்குகிறோம்" என்ற வாசகங்களுடன் கட் அவுட் வைத்துள்ளனர்.

அந்த கட் அவுட்டில், பாகுபலி வேடத்துடனும், கையில் வாளுடனும் எடப்பாடி பழனிசாமி, நிற்பதை போன்று வடிவமைத்துள்ளனர். மேலும் அந்த கட் அவுட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்கள் அருண்குமார், ஜெயராமன் ஆகியோர் படங்களும் இடம்பெற்றுள்ளன.

Newsletter

திருமணமானதை மறைத்து கர்ப்பமாக்கிய பெண்ணுக்கு மிரட்டல்: காவலர் கைது

கோவை அருகே திருமணமானதை மறைத்து இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கியதுடன், கட்டாய கருக்கலைப்பு மற்றும் கொலை மிரட்டல் விடுத்...

கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று இரவு முதல் போக்குவரத்து கட்டுப்பாடு

கேபிள் பதிக்கும் பணி காரணமாக கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று (மே 14) இரவு முதல் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதி...

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...