கோவை அருகே டெம்போ மீது இரு சக்கரவாகனம் மோதி விபத்து - 11 வகுப்பு மாணவர் பலி!

கோவை துடியலூர் அடுத்துள்ள நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே சரக்கு ஏற்றி வந்த டெம்போ மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் 11ம் வகுப்பு மாணவர் பிரவீன் உயிரிழந்தார். இதுகுறித்து பி.என்.பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.



கோவை கே.என்.ஜி.புதூரில் இருந்து ஹாலோபிளாக் கற்கள் ஏற்றிக்கொண்டு டெம்போ ஒன்று இன்று காலை மேட்டுப்பாளையம் சாலையில் காரமடை நோக்கி சென்றுகொண்டிருந்தது.

டெம்போவை சூர்யா என்பவர் ஓட்டிவந்துள்ளார். அவருடன் 2 வடமாநில தொழிலாளர்களும் இருந்துள்ளனர். அவர்கள் நரசிம்மநாயக்கபாளையம் ஜோதிகாலனி அருகே வரும்போது, அதேதிசையில் இருசக்கர வாகனத்தில் வந்த 11வகுப்பு மாணவர் பிரவீன் கட்டுப்பாட்டை இழந்து டெம்போ மீது மோதினார்.

அதில், டெம்போவிவின் முன்சக்கரத்தில் சிக்கிய இருசக்கர வாகனம் சுமார் 50 மீட்டர் தூரம் இழுத்து சென்றது.



அப்போது சாலையை கடப்பதற்காக நின்றுகொண்டு இருந்த லாரி மீது மோதியதில் டெம்போ ஒரு சைடாக விழுந்தது. அப்பொது டெம்போவில் இருந்த ஹாலோபிளாக் கற்கள் அனைத்து சாலையில் கொட்டியது.



இதில் இரு சக்கர வாகனத்தை ஓட்டிவந்த மாணவர் பிரவீன் பலத்த காயம் அடைந்தார். டெம்போ ஓட்டுநர் மற்றும் வடமாநில வாலிபர்கள் 2 பேரும் காயம் அடைந்தனர்.

அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அவர்களை சாய்பாபாகாலனியிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் பெரியநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அங்கிருந்த போக்குவரத்து நெரிசலை சரிசெய்தும், கீழே விழுந்து கிடந்த ஹாலோபிளாக் கற்களை பொதுமக்களுடன் இணைந்து அப்புறப்படுத்தி வாகன ஓட்டிகளுக்கு வழி ஏற்படுத்தினர்.

இந்த விபத்தில் காயமடைந்த 11ம் வகுப்பு மாணவர் பிரவீன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இன்னோவிஷன்-2026 அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் போட்டிகள் நடைபெற்றன

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மாணவர்களின் சிந்தனைத்திறன் மற்றும் ஆய்வுநோக்கை ஊக்குவிக்கும் வகையில் இன்னோவிஷன்-2026 அறிவிய...

கோவை வடக்கு மண்டல வளர்ச்சித் திட்டங்களை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் இணைப்பு பா...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 51 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் க...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...

கோவையில் 283 ஆக்கிரமிப்புகள் அகற்றம்; அனுமதியற்ற விளம்பரப் பலகைகளுக்கு கடும் நடவடிக்கை

கோயம்புத்தூர் மாநகராட்சி ஜூலை 23 முதல் 283 ஆக்கிரமிப்புகளையும், 46 அனுமதியற்ற விளம்பரப் பலகைகளையும் அகற்றியுள்ளது. மேற்க...