கோவை அருகே டெம்போ மீது இரு சக்கரவாகனம் மோதி விபத்து - 11 வகுப்பு மாணவர் பலி!

கோவை துடியலூர் அடுத்துள்ள நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே சரக்கு ஏற்றி வந்த டெம்போ மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் 11ம் வகுப்பு மாணவர் பிரவீன் உயிரிழந்தார். இதுகுறித்து பி.என்.பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.



கோவை கே.என்.ஜி.புதூரில் இருந்து ஹாலோபிளாக் கற்கள் ஏற்றிக்கொண்டு டெம்போ ஒன்று இன்று காலை மேட்டுப்பாளையம் சாலையில் காரமடை நோக்கி சென்றுகொண்டிருந்தது.

டெம்போவை சூர்யா என்பவர் ஓட்டிவந்துள்ளார். அவருடன் 2 வடமாநில தொழிலாளர்களும் இருந்துள்ளனர். அவர்கள் நரசிம்மநாயக்கபாளையம் ஜோதிகாலனி அருகே வரும்போது, அதேதிசையில் இருசக்கர வாகனத்தில் வந்த 11வகுப்பு மாணவர் பிரவீன் கட்டுப்பாட்டை இழந்து டெம்போ மீது மோதினார்.

அதில், டெம்போவிவின் முன்சக்கரத்தில் சிக்கிய இருசக்கர வாகனம் சுமார் 50 மீட்டர் தூரம் இழுத்து சென்றது.



அப்போது சாலையை கடப்பதற்காக நின்றுகொண்டு இருந்த லாரி மீது மோதியதில் டெம்போ ஒரு சைடாக விழுந்தது. அப்பொது டெம்போவில் இருந்த ஹாலோபிளாக் கற்கள் அனைத்து சாலையில் கொட்டியது.



இதில் இரு சக்கர வாகனத்தை ஓட்டிவந்த மாணவர் பிரவீன் பலத்த காயம் அடைந்தார். டெம்போ ஓட்டுநர் மற்றும் வடமாநில வாலிபர்கள் 2 பேரும் காயம் அடைந்தனர்.

அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அவர்களை சாய்பாபாகாலனியிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் பெரியநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அங்கிருந்த போக்குவரத்து நெரிசலை சரிசெய்தும், கீழே விழுந்து கிடந்த ஹாலோபிளாக் கற்களை பொதுமக்களுடன் இணைந்து அப்புறப்படுத்தி வாகன ஓட்டிகளுக்கு வழி ஏற்படுத்தினர்.

இந்த விபத்தில் காயமடைந்த 11ம் வகுப்பு மாணவர் பிரவீன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...