வனவிலங்கு பட்டியலில் இருந்து காட்டுப்பன்றிகளை நீக்க வேண்டும் - உடுமலை விவசாயிகள் கோரிக்கை!

உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் காட்டுப்பன்றிகள், விளைநிலங்களில் புகுந்து நிலக்கடலை, மக்காச்சோளம், மா, தென்னை உள்ளிட்ட பயிர்கள் மட்டுமல்லாது பாசன கட்டமைப்பையும் சேதப்படுத்துவதால் வனவிலங்கு பட்டியலில் இருந்து காட்டுப்பன்றிகளை நீக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.


திருப்பூர்: உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்துவதால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள், வனவிலங்கு பட்டியலில் இருந்து காட்டுப்பன்றிகளை நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் வட்டாரங்களில் அனைத்து பகுதிகளிலும் காட்டுப்பன்றிகளால் நாள்தோறும் பல்வேறு பிரச்சனைகளை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர்.

வன எல்லை பகுதிகளில் மட்டுமல்லாது வெகு தொலைவில் உள்ள கிராமங்களிலும் காட்டுப்பன்றிகள் பெருக்கம் அதிகரித்துள்ளது அப்பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள நிலக்கடலை, மக்காச்சோளம், மா, தென்னை மற்றும் காய்கறி சாகுபடியிலும் காட்டு பன்றிகள் தொடர் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.

காட்டுப்பன்றிகள் நடமாட்டத்தால், இரவு நேரங்களில் விளைநிலங்களுக்கும், கிராம இணைப்பு சாலைகளுக்கு செல்லவும் விவசாயிகள் அச்சப்படும் நிலை ஏற்பட்டு உள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது, காட்டுப் பன்றிகளால் பல்லாயிரம் ஏக்கரில் செய்யப்பட்டுள்ள விவசாய சாகுபடி கேள்விக்குறியாகி வருகின்றது பயிர்களை அழித்தல், விலை பொருட்கள் மற்றும் பாசன கட்டமைப்புகளை சேதப்படுத்துதல் என பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர்.

வனத்துறையினர் இந்த பிரச்சினைக்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக செயல்பட்டு வருகின்றனர். பாதிப்புகளுக்கு நிவாரணம் கிடைப்பதில்லை ஆகையால் வனவிலங்கு பட்டியிலில் இருந்து காட்டுபன்றியை நீக்க வேண்டும் இதற்கான கருத்துருவை வனத்துறையினர் வருவாய்த்துறை இணைந்து அரசுக்கு அனுப்ப வேண்டும், என்றனர்.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...