கோவையில் மக்கள் நலத்திட்டங்களுக்காக தனியார் நிறுவனங்கள் ரூ.87.5 லட்சம் நிதியுதவி

கோவையில் பல்வேறு நலத்திட்டங்களுக்காக கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் சார்பில்‌ ரூ.12.50 லட்சம், சி.ஆர்‌.ஐ. பம்ப்ஸ்‌ நிறுவனம் சார்பில் ரூ.50 லட்சம் மற்றும் கோவை சருக்கு விளையாட்டு கழகம் சார்பில் ரூ.25 லட்சம் என மொத்தம் ரூ.‌87.5 லட்சம் மதிப்பிலான நிதியுதவி மாநகராட்சி ஆணையர் பிரதாப்பிடம் இன்று வழங்கப்பட்டது.


கோவை: கோவையில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களுக்கு தனியார் நிறுவனங்கள் சார்பில் ரூ.87.5 லட்சம் நிதியுதவி மாநகராட்சி ஆணையரிடம் இன்று வழங்கப்பட்டன.

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம்‌ ஆர்‌.எஸ்‌.புரம்‌ ஆண்கள்‌ மேல்நிலை பள்ளியில்‌ நமக்கு நாமே திட்டத்தின்‌ கீழ்‌ புதிதாக கழிவறைகள்‌ கட்டுவதற்கு கிருஷ்ணா ஸ்வீட்ஸ்‌ ரூ. 12.50 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான காசோலையை நிர்வாக இயக்குனர்‌ கிருஷ்ணன்‌‌ கோவை மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌பிடம்‌ இன்று வழங்கினார். இந்த நிகழ்வின் போது, மாமன்ற உறுப்பினர்‌ கார்த்திக்‌ செல்வராஜ்‌ உடனிருந்தார்.



இதேபோல், கோவை வடக்கு மண்டலத்திற்குட்பட்ட சரவணம்பட்டி பகுதியில்‌ உள்ள எரியூட்டு மையத்தில்‌ நமக்கு நாமே திட்டத்தின் கீழ்‌ புதிதாக தகன மேடை மற்றும்‌ சடங்கு முன் மண்டபம்‌ கட்டும்‌ பணிகளுக்காக சி.ஆர்‌.ஐ. பம்ப்ஸ்‌ நிறுவனம் சார்பில் ரூ.50 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான காசோலையை கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்பிடம் சி.ஆர்‌.ஐ. பம்ப்ஸ்‌ நிர்வாக துணைத்‌ தலைவர்‌ செளந்தரராஜன்‌ இன்று‌ வழங்கினார்‌. இந்த நிகழ்வின் போது, மாநகராட்சி துணை ஆணையாளர்‌ மரு.மோ.ஷர்மிளா உடனிருந்தார்.



மேலும், நமக்கு நாமே திட்டத்தின் கீழ்‌ வ.உ.சி. மைதானத்தில்‌ உள்ள சருக்கு விளையாட்டு அரங்கத்தில்‌ புனரமைப்பு பணிகள்‌ மேற்கொள்வதற்காக கோவை சருக்கு விளையாட்டு கழகம் சார்பில் ரூ.25 லட்சம்‌ வழங்கப்பட்டது.

இதற்கான காசோலையை கோவை சருக்கு விளையாட்டு கழக செயலாளர்‌ சந்திரசேகர் மற்றும் பொருளாளர்‌ சாந்த நரசிம்மன்‌ ஆகியோர், கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌பிடம் இன்று வழங்கினர். இந்த நிகழ்வின் போது, மாநகராட்சி துணை ஆணையாளர்‌ மரு.மோ.ஷர்மிளா உடனிருந்தார்.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...