கோவையில் விவசாயிகளுக்கு உதவிய பார்க் குழுமம் - ரூ.2 லட்சத்திற்கான காசோலை ஆட்சியரிடம் ஒப்படைப்பு!

கோவையில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் SC/ST விவசாயிகளுக்கான பங்குத்தொகையாக ரூ. 2 லட்சத்தை பார்க் கல்வி குழுமம் சார்பில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி-யிடம் வழங்கப்பட்டது.


கோவை: கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பல நூறு SC/ST விவசாயிகள் பயன் பெற்று வருகின்றனர்.

இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இடுபொருள், மின்கல தெளிப்பான், வேளாண் உபகரணம், தார்ப்போலின் போன்ற உபகரணங்கள் மானிய விலையில் வழங்கப்படுகிறது. இதன் விலையில் ஒரு பகுதியை விவசாயிகள் செலுத்த வேண்டும்.

இந்நிலையில், இந்தப் பங்குத் தொகையை செலுத்த முடியாத விவசாயிகளின் சார்பாக ரூபாய் இரண்டு லட்சத்தை நன்கொடையாக பார் கல்வி குழுமம், கோவை ஆட்சியரிடம் வழங்கியது.

இதன் மூலம் 128 விவசாயிகள் பயன் பெறுவார்கள். இந்தத் தொகைக்கான காசோலையை பார்க் கல்வி குழுமத்தின் முதன்மை செயல் அலுவலர் அனுஷா ரவி கோவை ஆட்சியர் கிராந்திகுமார் பாடியிடம் ஒப்படைத்தார்.

மேலும் இந்தத் திட்டத்திற்காக RAAC ரவீந்திரன் ரூபாய் 60 ஆயிரத்துக்கான காசோலையை ஆட்சியரிடம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியின்போது வேளாண்துறை இணை இயக்குநர் சஃபி அஹமத் உடனிருந்தார்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...