கோவையில் விவசாயிகளுக்கு உதவிய பார்க் குழுமம் - ரூ.2 லட்சத்திற்கான காசோலை ஆட்சியரிடம் ஒப்படைப்பு!

கோவையில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் SC/ST விவசாயிகளுக்கான பங்குத்தொகையாக ரூ. 2 லட்சத்தை பார்க் கல்வி குழுமம் சார்பில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி-யிடம் வழங்கப்பட்டது.


கோவை: கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பல நூறு SC/ST விவசாயிகள் பயன் பெற்று வருகின்றனர்.

இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இடுபொருள், மின்கல தெளிப்பான், வேளாண் உபகரணம், தார்ப்போலின் போன்ற உபகரணங்கள் மானிய விலையில் வழங்கப்படுகிறது. இதன் விலையில் ஒரு பகுதியை விவசாயிகள் செலுத்த வேண்டும்.

இந்நிலையில், இந்தப் பங்குத் தொகையை செலுத்த முடியாத விவசாயிகளின் சார்பாக ரூபாய் இரண்டு லட்சத்தை நன்கொடையாக பார் கல்வி குழுமம், கோவை ஆட்சியரிடம் வழங்கியது.

இதன் மூலம் 128 விவசாயிகள் பயன் பெறுவார்கள். இந்தத் தொகைக்கான காசோலையை பார்க் கல்வி குழுமத்தின் முதன்மை செயல் அலுவலர் அனுஷா ரவி கோவை ஆட்சியர் கிராந்திகுமார் பாடியிடம் ஒப்படைத்தார்.

மேலும் இந்தத் திட்டத்திற்காக RAAC ரவீந்திரன் ரூபாய் 60 ஆயிரத்துக்கான காசோலையை ஆட்சியரிடம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியின்போது வேளாண்துறை இணை இயக்குநர் சஃபி அஹமத் உடனிருந்தார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...