கோவையில் விவசாயிகளுக்கு உதவிய பார்க் குழுமம் - ரூ.2 லட்சத்திற்கான காசோலை ஆட்சியரிடம் ஒப்படைப்பு!

கோவையில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் SC/ST விவசாயிகளுக்கான பங்குத்தொகையாக ரூ. 2 லட்சத்தை பார்க் கல்வி குழுமம் சார்பில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி-யிடம் வழங்கப்பட்டது.


கோவை: கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பல நூறு SC/ST விவசாயிகள் பயன் பெற்று வருகின்றனர்.

இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இடுபொருள், மின்கல தெளிப்பான், வேளாண் உபகரணம், தார்ப்போலின் போன்ற உபகரணங்கள் மானிய விலையில் வழங்கப்படுகிறது. இதன் விலையில் ஒரு பகுதியை விவசாயிகள் செலுத்த வேண்டும்.

இந்நிலையில், இந்தப் பங்குத் தொகையை செலுத்த முடியாத விவசாயிகளின் சார்பாக ரூபாய் இரண்டு லட்சத்தை நன்கொடையாக பார் கல்வி குழுமம், கோவை ஆட்சியரிடம் வழங்கியது.

இதன் மூலம் 128 விவசாயிகள் பயன் பெறுவார்கள். இந்தத் தொகைக்கான காசோலையை பார்க் கல்வி குழுமத்தின் முதன்மை செயல் அலுவலர் அனுஷா ரவி கோவை ஆட்சியர் கிராந்திகுமார் பாடியிடம் ஒப்படைத்தார்.

மேலும் இந்தத் திட்டத்திற்காக RAAC ரவீந்திரன் ரூபாய் 60 ஆயிரத்துக்கான காசோலையை ஆட்சியரிடம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியின்போது வேளாண்துறை இணை இயக்குநர் சஃபி அஹமத் உடனிருந்தார்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...