கிணத்துக்கடவில் சூறாவளிக்காற்றுடன் பெய்த கனமழை - 15,000 வாழை மரங்கள் சேதம்!

கிணத்துக்கடவு சுற்றுவட்டார பகுதிகளில் நேற்றிரவு சூறாவளிக் காற்றுடன் பெய்த பலத்த மழையால் 15,000 வாழை மரங்கள் அடியோடு சாய்ந்ததால் வேதனையடைந்த விவசாயிகள், வேளாண் துறையினர் முறையாக கணக்கீடு செய்து உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.


கோவை: கிணத்துக்கடவில் நேற்றைய தினம் சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் 15,000 வாழை மரங்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

கிணத்துக்கடவு சுற்றுவட்டார பகுதியில் நேற்றிரவு சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.



இதன் காரணமாக கிணத்துக்கடவு அருகேயுள்ள பொட்டையாண்டிபுறம்பு, கல்லாபுரம், சிங்கையன் புதூர் ஆகிய பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட 15,000 வாழை மரங்கள் அடியோடு சாய்ந்து சேதம் அடைந்தன.



தண்ணீர் பற்றாக்குறை இருந்தாலும் சொட்டுநீர் பாசனம் மூலம் வளர்த்து பராமரிக்கப்பட்டு வந்த வாழை மரங்கள் ஒரு மணி நேரம் வீசிய காற்றில் அடியோடு சாய்ந்ததைக் கண்டு விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.



இந்நிலையில், வாழைத்தார்கள் இன்னும் இரண்டு மாதங்களில் அறுவடை செய்யும் நேரத்தில் வாழை மரங்கள் சேதம் அடைந்திருப்பது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்திருப்பதாகவும் எனவே வேளாண்மை துறை அதிகாரிகள் முறையாக கணக்கெடுத்து இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...