நீலகிரியில் சுற்றுலா பயணிகளிடம் பிச்சை எடுத்து பூங்கா பணியாளர்கள் நூதன போராட்டம்!

நீலகிரி மாவட்டத்தில் பூங்கா மற்றும் பண்ணை பணியாளர்கள், நிரந்தர பணி, பணி பாதுகாப்பு உள்ளிட்ட 10அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்பதாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் இன்று சுற்றுலா பயணிகளிடம் பிச்சை எடுத்து பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


நீலகிரி: 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 9வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பண்ணை மற்றும் பூங்கா பணியாளர்கள், சுற்றுலா பயணிகளிடம் பிச்சை எடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பூங்கா மற்றும் பண்ணை பணியாளர்கள் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த எட்டு நாட்களாக தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே பூங்கா பணியாளர்கள் மரத்துக்கு மனு கொடுத்தல், ஒப்பாரி பாடல், குளத்திற்குள் இறங்கி போராட்டம் என பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஒன்பதாவது நாளாக இன்றும் இந்த உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



இந்நிலையில், இன்று தாவரவியல் பூங்காவை சுற்றி பார்க்க வந்த சுற்றுலா பயணிகளிடம் பிச்சை கேட்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



அப்போது தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தனர்.



இதுவரை அரசும், மாவட்ட நிர்வாகமும் தங்களுக்கான கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமல் உள்ளது. தங்களுக்கான தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை தொடர போவதாவும் தெரிவித்தனர்.

பூங்கா மற்றும் பண்ணை பணியாளர்களின் தொடர் போராட்டத்தால் உதகை குன்னூர் கோத்தகிரி கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பூங்காக்களில் பராமரிப்பு பணிகள் பெரும் அளவு பாதிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...