கோவையில் ஆர்.எஸ்.எஸ் வகுப்புக்கு சென்ற மாணவர்கள் மீது தாக்குதல் - இந்து அமைப்புகள் திரண்டதால் பரபரப்பு!

கோவையில் ஆர்எஸ்எஸ் அமைப்பு நடத்தும் வகுப்பிற்கு சென்ற சிறுவர்களை கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் தகாத வார்த்தைகளால் பேசி, தாக்கியதாக கூறி இந்து முன்னணி, பாஜகவினர் வெரைட்டிஹால் சாலையில் உள்ள காவல்நிலையம் முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் நடைபெற்ற வகுப்பிற்கு சென்ற சிறுவர்கள் தாக்கப்பட்டதாக கூறி இந்து அமைப்பினர் காவல்நிலையத்தில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை ம.ந.க. வீதியில் இந்து முன்னணி, பா.ஜ.க கட்சி பிரமுகர்களின் மகன்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நடத்தும் வகுப்பில் பங்கேற்க சென்றுள்ளனர்.

அப்போது அங்கு வந்த கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பிரமுகர், அந்த சிறுவர்களை தகாத வார்த்தைகளால் பேசி, தாக்கியதாக கூறப்படுகிறது.



இதையறிந்த இந்து முன்னணி, பாஜக உள்ளிட்ட அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் வெரைட்டிஹால் சாலையில் உள்ள காவல் நிலையம் முன்பு திரண்டு, அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரினர். இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது.



இது குறித்து தகவல் அறிந்த கோவை மாநகர துணை கமிஷனர் சந்தீஷ் மற்றும் போலீசார் விரைந்து வந்து இந்து அமைப்பு நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, உரிய விசாரணை செய்து சம்பந்தப்பட்ட நபர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதை ஏற்று அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...