தங்க நகைகளில் நாளை முதல் ஹெச்.யூ.ஐ.டி., என்ற ஹால்மார்க் முத்திரை கட்டாயம்..! - பி.ஐ.எஸ் அமைப்பு அறிவிப்பு!

தங்க நகைகளில் நாளை (ஏப்ரல் 1) முதல் ஹெச்.யூ.ஐ.டி எனப்படும் ஹால்மார்க் தனித்துவ அடையாள எண்கள் பதிவு செய்திருப்பது கட்டாயம் என பி.ஐ.எஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. நுகர்வோர் இந்த அடையாளத்தை பார்த்து நகைகளை வாங்கும்படியும் வலியுறுத்தியுள்ளது.


கோவை: தங்க நகைகளில் ஹெச்.யூ.ஐ.டி., எனப்படும் ஹால்மார்க் தனித்துவ அடையாள எண்கள் நாளை முதல் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.



பி.ஐ.எஸ் எனப்படும் இந்திய தர நிர்ணய அமைப்பானது, தங்க நகைகள் மற்றும் தங்கத்திலான கலைப் பொருட்களுக்கு ஹால்மார்க் தனித்துவ அடையாள எண் முறையை அறிமுகம் செய்துள்ளது. இது ஒவ்வொரு நகைக்கும் பிரத்யேக குறியீட்டைக் கொண்டிருக்கும். இந்த நடைமுறை, நாளை முதல் கட்டாயம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக, பி.ஐ.எஸ்., கோவை முதுநிலை இயக்குனர் கோபிநாத் செய்தியாளர்களிடம் கூறியதாவது,



பி.ஐ.எஸ்., லோகோ, நகையின் துாய்மை தன்மை ஹால்மார்க் தனித்துவ 6 இலக்க அடையாள எண் ஆகிய மூன்று குறியீடுகளைக் கொண்ட ஹால்மார்க் முத்திரை அனைத்து தங்க நகைகளுக்கும் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. நாளை (ஏப்.1) முதல் நாடு முழுதும் இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது.

நுகர்வோர் நகை வாங்கும்போது இதனைக் கட்டாயமாக பார்த்து வாங்கவும். இந்த குறியீடு பெறாத நகைகளை விற்பனை செய்யக் கூடாது. நகைக்கடைகளில் விற்பனை செய்யப்படாத பழைய நகைகள் இருப்பின், அவற்றில் மறுமுத்திரை பதிவு செய்ய வேண்டும்.

பி.ஐ.எஸ்., பதிவு பெற்ற நகை உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் இந்த தனித்துவ அடையாள எண் இன்றி விற்பனை செய்தால், அவர்களின் பதிவு ரத்து செய்யப்படும்.

ஏற்றுமதி நகைகள், 2 கிராமுக்கு குறைவான நகை, கண்காட்சி, விற்பனையை ஊக்குவிக்க வழங்கப்படும் நகைகள், ஆண்டுக்கு 40 லட்சம் ரூபாய்க்கு குறைவாக விற்பனை செய்வோர், மருத்துவப் பயன்பாட்டுக்கான தங்கம் ஆகியவற்றில் இந்த முத்திரை பதிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

பி.ஐ.எஸ்., பதிவு பெறாத நகை விற்பனையாளர்கள், ஹெச்.யூ.ஐ.டி. எண்ணுடன் ஹால்மார்க் செய்த நகைகளையோ, ஹால்மார்க் இல்லாத தங்க நகைகளையோ விற்பனை செய்ய அனுமதி இல்லை. மீறினால் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த குறியீட்டை சரிபார்க்க, ‘பி.ஐ.எஸ்., கேர்’ என்ற செயலியை (ஆப்) பி.ஐ.எஸ்., நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த செயலியைத் பதிவிறக்கம் செய்து, அதில், இந்த குறியீட்டை உள்ளிட்டால், நகை எங்கு முதலில் விற்பனை செய்யப்பட்டது.

நகையின் எடை, நகையின் தூய்மைத் தன்மை, என்ன வகையான நகை என்பது தெரிந்துவிடும். எனவே, நுகர்வோரின் நலன் பாதுகாக்கப்படும். ஹால்மார்க் செய்த நகையின் உண்மைத் தன்மையை சரிபார்த்து கொள்ள முடியும்.

கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, நாமக்கல் ஆகிய ஆறு மாவட்டங்களை உள்ளடக்கிய கோவை பி.எஸ்.ஐ., அலுவலக எல்லையில், மொத்தம் 3,728 விற்பனையாளர்கள் பதிவு செய்துள்ளனர். இதில், கோவை மாவட்டத்தில் மட்டும் 1,844 நகை விற்பனையாளர்கள் பதிவு செய்துள்ளனர்.

கோவை மண்டலத்தில், மொத்தம் 56 ஹால்மார்க் தரச்சான்று வழங்கும் மையங்கள் உள்ளன. கோவையில் மட்டும் 35 மையங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...