கோவையில் போதை மாத்திரைகள், போதை ஊசிகள் பறிமுதல் - இளைஞர்கள் 3 பேர் கைது

கோவை மசக்காளிபாளையம் பகுதியில் இரவு நேரத்தில் போதை மாத்திரைகள் மற்றும் போதை ஊசிகளை விற்பனை செய்துவந்த யாசின், அன்வர் சாதிக், சுல்தான் பாஷா என 3 பேரை போலீசார் கைது செய்தனர்.



கோவை: கோவை மாநகரில் போதை பொருள் புழக்கத்தை தடுப்பதற்காக மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின் அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, சிங்காநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு சில இளைஞர்கள் போதை மாத்திரை விற்பதாக போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

அதன்பேரில், போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்திய நிலையில் மசக்காளிபாளையம் பகுதியில் கார்ப்பரேஷன் பள்ளி அருகே சந்தேகத்துக்கு இடமாக மூன்று இளைஞர்கள் நின்றிருந்தனர். அவர்களைப் பிடித்து விசாரித்தபோது, போதைக்காக மாத்திரைகளை விற்று வருவது தெரியவந்தது.

தொடர்ந்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், அவர்கள் மூன்று பேரும், இறைச்சிக் கடையில் வேலை பார்க்கும் ரத்தினபுரி பகுதியைச் சார்ந்த ஷாம் என்கிற யாசின் (வயது28) , ஓட்டுனராக பணியாற்றி வரும் போத்தனூரைச் சார்ந்த அன்வர் சாதிக் (வயது28), பெயிண்டிங் வேலை பார்க்கின்ற சாரமேடு பகுதியைச் சார்ந்த சுல்தான் பாஷா (வயது27) என்பது உறுதியானது.

இதையடுத்து, சிங்காநல்லூர் போலீசார் இவர்களை உடனடியாக கைது செய்து, அவர்களிடமிருந்து டேபண்டடால் 100 எம் ஜி 168 மாத்திரைகள், டேபண்டடால் 50 எம் ஜி 190 மாத்திரைகள், மாத்திரைகளை கலக்க பயன்படுத்தும் சோடியம் குளோரைடு இன்ஜெக்சன் பிளாடிக் பாட்டில் 32 , பயன்படுத்தப்பட்ட ஊசி 10, பயன்படுத்தப்படாத ஊசி 14 உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில், போதைக்காக மாத்திரை விற்பனையில் ஈடுபட்டிருந்த வாலிபர்கள் கைது செய்யப்பட்டு அதிரடியாக சிறையில் அடைக்கப்பட்டனர். சமூகத்தில் தீங்கை தரும் போதை பொருட்களை விற்போர் மீது சட்டப்படின் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலிஸார் எச்சரிக்கை மணி அடித்திருக்கின்றனர் .

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...