கோவையில் போதை மாத்திரைகள், போதை ஊசிகள் பறிமுதல் - இளைஞர்கள் 3 பேர் கைது

கோவை மசக்காளிபாளையம் பகுதியில் இரவு நேரத்தில் போதை மாத்திரைகள் மற்றும் போதை ஊசிகளை விற்பனை செய்துவந்த யாசின், அன்வர் சாதிக், சுல்தான் பாஷா என 3 பேரை போலீசார் கைது செய்தனர்.



கோவை: கோவை மாநகரில் போதை பொருள் புழக்கத்தை தடுப்பதற்காக மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின் அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, சிங்காநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு சில இளைஞர்கள் போதை மாத்திரை விற்பதாக போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

அதன்பேரில், போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்திய நிலையில் மசக்காளிபாளையம் பகுதியில் கார்ப்பரேஷன் பள்ளி அருகே சந்தேகத்துக்கு இடமாக மூன்று இளைஞர்கள் நின்றிருந்தனர். அவர்களைப் பிடித்து விசாரித்தபோது, போதைக்காக மாத்திரைகளை விற்று வருவது தெரியவந்தது.

தொடர்ந்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், அவர்கள் மூன்று பேரும், இறைச்சிக் கடையில் வேலை பார்க்கும் ரத்தினபுரி பகுதியைச் சார்ந்த ஷாம் என்கிற யாசின் (வயது28) , ஓட்டுனராக பணியாற்றி வரும் போத்தனூரைச் சார்ந்த அன்வர் சாதிக் (வயது28), பெயிண்டிங் வேலை பார்க்கின்ற சாரமேடு பகுதியைச் சார்ந்த சுல்தான் பாஷா (வயது27) என்பது உறுதியானது.

இதையடுத்து, சிங்காநல்லூர் போலீசார் இவர்களை உடனடியாக கைது செய்து, அவர்களிடமிருந்து டேபண்டடால் 100 எம் ஜி 168 மாத்திரைகள், டேபண்டடால் 50 எம் ஜி 190 மாத்திரைகள், மாத்திரைகளை கலக்க பயன்படுத்தும் சோடியம் குளோரைடு இன்ஜெக்சன் பிளாடிக் பாட்டில் 32 , பயன்படுத்தப்பட்ட ஊசி 10, பயன்படுத்தப்படாத ஊசி 14 உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில், போதைக்காக மாத்திரை விற்பனையில் ஈடுபட்டிருந்த வாலிபர்கள் கைது செய்யப்பட்டு அதிரடியாக சிறையில் அடைக்கப்பட்டனர். சமூகத்தில் தீங்கை தரும் போதை பொருட்களை விற்போர் மீது சட்டப்படின் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலிஸார் எச்சரிக்கை மணி அடித்திருக்கின்றனர் .

Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...