வால்பாறையில் பாதுகாப்பின்றி வெட்டப்படும் தேயிலைச் செடிகள் - பணியாளர்கள், பொதுமக்களுக்கு ஆபத்து எனப் புகார்

கோவை மாவட்டம் வால்பாறையில் தேயிலை செடிகள் வெட்டும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள், உரிய பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தாமல் பணியாற்றுவதால் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படும் சூழல் இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் சுமார் 62 எஸ்டேட்டுகள் உள்ளன. இங்கு முக்கிய விவசாயமே தேயிலை ஆகும். நூறாண்டுக்கு ஒரு முறை தேயிலை செடியை முழுமையாக அகற்றப்பட்டு புதிய தேயிலை செடி நாத்துகள் நடப்பட்டு அதன்பின் அதை வளர்த்து தேயிலை செடியில் தேயிலை இலைகளை பறித்து தேயிலை தூள் தயாரிக்கப்படுகிறது.

இது பத்திற்கும் மேற்பட்ட ரகங்களாகப் பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. தேயிலை தோட்ட பணியில் சுமார் ஐம்பதாயிரம் பேர் தற்போது பணி செய்து வருகிறார்கள். ஒரு தேயிலை செடியை வளர்த்து அதன்பின் தேயிலை பறிக்கப்பட்டு தேயிலை செடி குறிப்பிட்ட அளவுக்கு வெட்டப்பட்டு அதன் பின் மீண்டும் தேயிலை இலை பறிக்கும் வண்ணம் செடி பராமரிக்கப்படுகிறது.

அவ்வாறு வெட்டும் பொழுது இயந்திரங்களை பயன்படுத்துவது வழக்கம். இந்த இயந்திரங்கள் கூர்மையான கத்திபோல் உள்ளவை. தேயிலை தோட்டப்பகுதியில் தேயிலை செடியை வெட்டும் பொழுது, பொதுமக்கள் அவ்வழியாக கவனமாகச் செல்ல அறிவுறுத்தும் வகையில் முறையாக அறிவிப்பு பலகை வைக்கப்படும்.

மேலும், சிவப்பு நிற ரிப்பன் வைத்து அப்பகுதியை பாதுகாக்க தடை செய்யப்பட்ட பகுதி என்றும் அறிவிக்கப்பட்ட பின்னரே தொழிலாளர்கள் இயந்திரத்தை பயன்படுத்துவார்கள்.

மேலும் இயந்திரத்தை பயன்படுத்தும் தொழிலாளர்கள் தலைக்கவசம், கையுறை மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்துவார்கள். இது தேயிலை தோட்ட நிர்வாகம் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பில் ஒன்றாகும்.



ஆனால் வால்பாறை அருகே நடுமலை எஸ்டேட் பகுதியில் சாலையோரமும் குடியிருப்பு அருகிலும் தேயிலை செடிகள் வெட்டப்பட்டு வருகிறது. அதில் மூன்று நபர்கள் வேலை செய்து வருகிறார்கள்.



வேலை செய்யும் நபர்கள் தலைக்கவசம் பாதுகாப்பு உபகரணம் எதுவும் இல்லாமலும் இருப்பதோடு, முறையான அறிவிப்புப் பலகையும் வைக்கப்படுவதில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், சாலையில் செல்லும் மக்களுக்கும், இயந்திரங்களை பயன்படுத்தி தேயிலை வெட்டும் தொழிலாளர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.

ஆபத்துகள் ஏற்படுவதற்கு முன்பே, எஸ்டேட் நிர்வாகம் இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...