வால்பாறையில் பாதுகாப்பின்றி வெட்டப்படும் தேயிலைச் செடிகள் - பணியாளர்கள், பொதுமக்களுக்கு ஆபத்து எனப் புகார்

கோவை மாவட்டம் வால்பாறையில் தேயிலை செடிகள் வெட்டும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள், உரிய பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தாமல் பணியாற்றுவதால் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படும் சூழல் இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் சுமார் 62 எஸ்டேட்டுகள் உள்ளன. இங்கு முக்கிய விவசாயமே தேயிலை ஆகும். நூறாண்டுக்கு ஒரு முறை தேயிலை செடியை முழுமையாக அகற்றப்பட்டு புதிய தேயிலை செடி நாத்துகள் நடப்பட்டு அதன்பின் அதை வளர்த்து தேயிலை செடியில் தேயிலை இலைகளை பறித்து தேயிலை தூள் தயாரிக்கப்படுகிறது.

இது பத்திற்கும் மேற்பட்ட ரகங்களாகப் பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. தேயிலை தோட்ட பணியில் சுமார் ஐம்பதாயிரம் பேர் தற்போது பணி செய்து வருகிறார்கள். ஒரு தேயிலை செடியை வளர்த்து அதன்பின் தேயிலை பறிக்கப்பட்டு தேயிலை செடி குறிப்பிட்ட அளவுக்கு வெட்டப்பட்டு அதன் பின் மீண்டும் தேயிலை இலை பறிக்கும் வண்ணம் செடி பராமரிக்கப்படுகிறது.

அவ்வாறு வெட்டும் பொழுது இயந்திரங்களை பயன்படுத்துவது வழக்கம். இந்த இயந்திரங்கள் கூர்மையான கத்திபோல் உள்ளவை. தேயிலை தோட்டப்பகுதியில் தேயிலை செடியை வெட்டும் பொழுது, பொதுமக்கள் அவ்வழியாக கவனமாகச் செல்ல அறிவுறுத்தும் வகையில் முறையாக அறிவிப்பு பலகை வைக்கப்படும்.

மேலும், சிவப்பு நிற ரிப்பன் வைத்து அப்பகுதியை பாதுகாக்க தடை செய்யப்பட்ட பகுதி என்றும் அறிவிக்கப்பட்ட பின்னரே தொழிலாளர்கள் இயந்திரத்தை பயன்படுத்துவார்கள்.

மேலும் இயந்திரத்தை பயன்படுத்தும் தொழிலாளர்கள் தலைக்கவசம், கையுறை மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்துவார்கள். இது தேயிலை தோட்ட நிர்வாகம் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பில் ஒன்றாகும்.



ஆனால் வால்பாறை அருகே நடுமலை எஸ்டேட் பகுதியில் சாலையோரமும் குடியிருப்பு அருகிலும் தேயிலை செடிகள் வெட்டப்பட்டு வருகிறது. அதில் மூன்று நபர்கள் வேலை செய்து வருகிறார்கள்.



வேலை செய்யும் நபர்கள் தலைக்கவசம் பாதுகாப்பு உபகரணம் எதுவும் இல்லாமலும் இருப்பதோடு, முறையான அறிவிப்புப் பலகையும் வைக்கப்படுவதில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், சாலையில் செல்லும் மக்களுக்கும், இயந்திரங்களை பயன்படுத்தி தேயிலை வெட்டும் தொழிலாளர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.

ஆபத்துகள் ஏற்படுவதற்கு முன்பே, எஸ்டேட் நிர்வாகம் இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை கழிவுநீர் தொட்டியில் விழுந்த இரு ஒப்பந்த ஊழியர்களை மீட்க தீவிர முயற்சி

கோவை சாய்பாபா காலனியில் கழிவுநீர் உந்து நிலையத்தில் மோட்டார் பழுது பார்க்க இறங்கிய இரு மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்கள் 40 அ...

SNR சன்ஸ் அறக்கட்டளை CEO C.V. ராம்குமாருக்கு மதிப்பு மிக்க தொழில் சேவை விருது

Rotary Club of Coimbatore Millennium மற்றும் Ramakrishna Matric Higher Secondary School Interact Club இணைந்து SNR சன்ஸ்...

கோவை-குவைத் இடையே நேரடி விமான சேவை ஏப்ரல் இறுதியில் தொடக்கம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து குவைத் நாட்டிற்கு Jazeera ஏர்லைன்ஸ் நிறுவனம் சார்பில் ஏப்ரல் இறுதியில் நேரடி விமா...

கவுண்டம்பாளையம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக சூர்யா பிரகாஷ் அறிவிப்பு

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியின் கீழ் போட்டியிடும் காங்கிரஸ் க...

ஸ்ரீ இராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் பெங்களூருவில் மாபெரும் சந்திப்பு

பெங்களூரு மடிவாலாவில் SRIT Alumni Connect 2K26 நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. பல்வேறு துறைகள் மற்றும் ஆண்டுகளைச் சேர்ந்த 1...

சென்னை-கோவை விமானக் கட்டணம் ரூ.16,500 ஆக உயர்வு: தொடர் விடுமுறை காரணம்

புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக சென்னை-கோவை விமான கட்டணம் ரூ.4,966-இலிருந்து ரூ.16,496 ஆக பல...