கோவையில் தேசிய நுகர்வோர் தின விழா போட்டி - பாராட்டு சான்றிதழ் வழங்கல்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தேசிய நுகர்வோர் தின விழா மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயங்களை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி வழங்கினார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய நுகர்வோர் தின விழா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உணவுப் பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் சார்பில் தேசிய நுகர்வோர் தின விழா மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தினவிழா மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத் தலைவர் தங்கவேல், முதன்மை இயக்குநர் இந்திய தர நிர்ணயம் அமைவனம் கோபிநாத், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை நியமன அலுவலர் தமிழ்செல்வன், மாவட்ட வழங்கல் அலுவலர் குணசேகரன் மற்றும் அரசி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.



இவ்விழாவில் நுகர்வோர் விழிப்புணர்வு தொடர்பாக நடைபெற்ற கட்டுரைப்போட்டி கவிதைப் போட்டி, ஓவியப் போட்டி போன்ற போட்டிகளில் வெற்றிபெற்ற பள்ளி, கல்லூரி மாணவ மாணவியருக்கு பரிசுகளையும், சிறந்த குடிமக்கள் நுகர்வோர் மன்றங்களுக்கு பரிசுக் கோப்பைகளையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர் ஒவ்வொரு பொருட்களுக்கும் ஒரு தரச்சான்றிதழ் உள்ளது. அந்த தரச்சான்றிதழ் பெறப்பட்டுள்ளதா? குறித்து விழிப்புணர்வுடன் இருந்து பொருட்களை வாங்க வேண்டும் எனக் கூறினார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...