கனிம வளங்கள் கடத்தலை தடுத்திடுக..! - கிணத்துக்கடவில் பாஜகவினர் போராட்டம்!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சுற்றுவட்டார பகுதிகளில் சட்ட விரோதமாக செயல்படும் கல்குவாரியிலிருந்து கனிம வளங்களை கடத்தப்படுவதை தடுக்ககோரி பாஜகவினர் திடீர் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: கிணத்துக்கடவு பகுதியில் கனிம வளங்கள் கடத்தப்படுவதை கண்டித்து பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சுற்றுவட்டார பகுதியில் செயல்படும் கல்குவாரியில் இருந்து சட்ட விரோதமாக கனிம வளங்கள் கடத்தப்படுவதாகவும், கனிமவளங்களை கடத்திச் செல்லும் வாகனங்களால் சாலைகள் சேதம் அடைந்து வருவதாகவும் கூறி அப்பகுதி விவசாயிகளும் சமூக ஆர்வலர்களும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று பத்தாம் நெம்பர் முத்தூர் பகுதியில் கல்குவாரிகள் குறித்து செய்தி சேகரித்து சென்ற தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளரை கல்குவாரி உரிமையாளர்கள் தாக்கியுள்ளனர்.

இதுச்சம்பவம் தொடர்பாக கல்குவாரி உரிமையாளர் சிவப்பிரகாஷ் உள்ளிட்ட மூன்று பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.



இந்த நிலையில் இன்று கல்குவாரியிலிருந்து சட்ட விரோதமாக கனிம வளங்களை கடத்தப்படுவதை தடுக்ககோரி மாவட்ட தலைவர் வசந்தராஜன் தலைமையில் பாஜகவினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இதையடுத்து சம்பவ அறிந்து சென்ற போலீசார் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட பாஜகவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாவட்ட ஆட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்ததால் பாஜகவினர் போராட்டத்தை கைவிட்டனர்.

பாஜகவினர் திடீரென உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...