உடுமலை வனப்பகுதியில் காட்டுத்தீ பரவல் - மலைவாழ் மக்களுக்கு விழிப்புணர்வு!

உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்கு காட்டுத்தீயினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மலைவாழ் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


திருப்பூர்: உடுமலை வனப்பகுதியில் காட்டுத்தீயினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மலைவாழ் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, சிறுத்தை, புலி, கடமான், காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. அத்துடன் அரிய வகை தாவரங்களும் வளர்ந்து வருகிறது.

தற்போது கோடைக் காலம் தொடங்கி உள்ளதால் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக வனப்பகுதியில் உள்ள செடி, கொடிகள் கருகத்தொடங்கி உள்ளது. இதனால் திருப்பூர் வனக்கோட்ட வனப்பகுதியில் அமைந்துள்ள தளிஞ்சி, மஞ்சம்பட்டி, கோடந்தூர், பொருப்பாறு உட்பட்ட 17 செட்டில்மென்ட்டுகளிலும் காட்டுத்தீ குறித்து விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.



காட்டு தீயினால் பாதிப்புகள் அதைத் தொடர்ந்து மாவட்ட வன அலுவலகத்தில் அனைத்து செட்டில்மென்ட்டை சேர்ந்த மூப்பர் மற்றும் மலைவாழ் மக்களுக்கு காட்டுத்தீயினால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது.

இதில் உதவி வனப்பாதுகாவலர் மற்றும் உதவி இயக்குநர் க.கணேஷ்ராம் பேசியதாவது:



வனம் மற்றும் வன உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களில் மிக முக்கியமானது காட்டுத்தீயினால் ஏற்படும் பாதிப்புகள் அடங்கும். காட்டுத்தீ ஏற்படுவதால் சோலைக்காடுகள் மற்றும் புல்வெளிகளில் உள்ள இயற்கை நீரூற்றுகள் பாதிப்படைந்து அடைபடுகின்றன.இதன் காரணமாக ஓடைகள், சிற்றோடைகள் வறண்டு தண்ணீர் பஞ்சம் ஏற்படுகிறது.

மக்களுக்கு நோய்கள் மேலும் சோலைக்காடுகள், புல்மலைகள் காட்டுத்தீயினால் பாதிப்பு ஏற்படுவதால் பெய்கின்ற மழைநீர் சேமித்து வைக்க இடமில்லாததால் விரைவில் சென்று கடலில் கலந்து விடுகிறது. மேலும் காட்டுத்தீயினால் மர இலைகள் சேமித்து வைத்துள்ள கார்பன்டை ஆக்ஸைடு போன்ற நச்சு வாயுக்கள் காற்றில் கலந்து மக்களுக்கு பல்வேறு நோய்களை உருவாக்குகிறது.

காட்டுத்தீயினால் புழு, பூச்சிகள் உள்பட பல்வேறு வன உயிரினங்கள் பாதிப்படைந்து அவ்விடத்தில் பல்லுயிர் பெருக்கம் பெரிதும் பாதிப்படைகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.



இதில் உடுமலை வனச்சரக அலுவலர் சிவக்குமார், உலகளாவிய இயற்கை பாதுகாப்பு நிதியகத்தைச் சேர்ந்த ரவிக்குமார், முல்லை உள்ளிட்ட வனத்துறை பணியாளர்கள், மலைவாழ் மக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை துப்பாக்கி சூடு வீரர்கள் 168 பதக்கங்கள் வென்று சாதனை

சென்னையில் நடைபெற்ற 51வது மாநில அளவிலான ரைபிள், பிஸ்டல் துப்பாக்கி சூடு போட்டியில் கோவை வீரர்கள் 168 பதக்கங்களை வென்றனர்...

கோவை குனியமுத்தூர் அருகே ஜவுளிக்கடை மேலாளருக்கு கத்திக்குத்து; தொழிலாளி கைது

கோவை குனியமுத்தூர் அருகே ஜவுளிக்கடை மேலாளரை கத்தியால் தாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். படுக...

கோவை மாநகராட்சி ஆணையர் மத்திய மண்டல தூய்மைப் பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மத்திய மண்டலத்தின் வார்டு 48ல் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்து, தூய்மைப் பணியாளர்களுக...

ஒண்டிப்புதூரில் ரயில்வே மேம்பாலம் அமைக்கக் கோரி மக்கள் போராட்டம்; கிழக்கு மண்டல அலுவலகம் முற்றுகை

கோவை ஒண்டிப்புதூர் சூர்யா நகர் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் சிங்காநல்லூர் கிழக்கு...

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...