கோவையில் கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு குவியும் பாராட்டு!

கோவை அன்னூரை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணியான வினோதினிக்கு பிரசவ வலி ஏற்பட்டு, குழந்தையின் தலை வெளியே வந்ததால், ஆம்புலன்ஸ் ஊழியர்களே அவருக்கு பிரசவம் பார்த்த நிலையில், அழகான ஆண் குழந்தை பிறந்தது. தாய் - சேய் இருவரும் நலமுடன் உள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் அன்னூர் அருகே நிறைமாத கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

அன்னூரை சேர்ந்தவர் கோகுல் பிரசாந்த். இவரது மனைவி வினோதினி (20). நிறைமாத கர்ப்பிணியான வினோதினிக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் அவர் மிகுந்த வலியுடன் துடித்த நிலையில், உறவினர்கள் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக சிறுமுகை ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து ஊழியர்களுடன் ஆம்புலன்ஸ் விரைந்து வந்தது. அப்போது குழந்தையின் தலை வெளியே வந்த நிலையில், அவருக்கு பிரசவ வலி அதிகரித்தது.

இதையடுத்து ஆம்புலன்ஸ் மருத்துவ நிபுணர் தினேஷ், பைலட் நந்தகோபால் உதவியுடன் வீட்டில் வைத்து வினோதினிக்கு பிரசவம் பார்த்தனர். அப்போது அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

இதன் பின்னர், 108 ஆம்புலன்ஸ் மூலம் தாயும்-சேயும் இருவரையும் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இருவரும் நலமுடன் இருப்பதாக தெரிவித்தனர்.

சரியான நேரத்தில் துரிதமாக செயல்பட்டு பெண்ணுக்கு பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பொதுமக்களின் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...