ஊதிய உயர்வு கோரி திருப்பூரில் பாத்திர தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!

பாத்திர உற்பத்தி தொழிலாளர்களுக்கு 2 ஆண்டுகளாக ஊதிய உயர்வு வழங்கப்படாத நிலையில், இதுதொடர்பான முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உரிய தீர்வு எட்டப்படாததால், திருப்பூர் அடுத்த அனுப்பர்பாளையம் பகுதியில் எவர் சில்வர் மற்றும் பித்தளை பாத்திர உற்பத்தி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தி திருப்பூர் அடுத்த அனுப்பர்பாளையம் பகுதியில் எவர் சில்வர் மற்றும் பித்தளை பாத்திர உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் பகுதியில் பாத்திர உற்பத்தி பிரசித்தி பெற்று விளங்குகிறது. இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் எவர்சில்வர் மற்றும் பித்தளை பாத்திரங்கள் உற்பத்தி செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படுகிறது.

பாத்திர உற்பத்தியை நம்பி 10,000-கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இப்பகுதியில் வசித்து வருகின்றனர். பாத்திர தொழிலாளர்கள் அதிக அளவில் உடல் உழைப்பை செலுத்தும் நிலையில் இவர்களுக்கான ஊதிய உயர்வு, கடந்த இரண்டு ஆண்டுகளாக அறிவிக்கப்படாமல் உள்ளது.



இதனை அடுத்து பித்தளை பாத்திர தொழிலாளர்களுக்கு 60% முதல் 70% வரை ஊதிய உயர்வும், அதே போல எவர் சில்வர் பாத்திர தொழிலாளர்களுக்கு 50 சதவிகித ஊதிய உயர்வும் தொழிற்சங்கம் சார்பில் கோரிக்கையாக வைக்கப்பட்டது.



தொடர்ந்து வருவாய் துறை தொழிலாளர் நலத்துறை மற்றும் பாத்திர உற்பத்தியாளர்கள் சங்கம் என முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், எவர்சில்வர் பாத்திர தொழிலாளர்களுக்கு 10 சதவிகித ஊதிய உயர்வும், பித்தளை பாத்திர தொழிலாளர்களுக்கு 15% ஊதிய உயர்வும் மட்டுமே கொடுக்க முடியும் என உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். இதனால் முடிவு எட்டப்படாமல் பேச்சுவார்த்தை தொடர்ந்து வருகிறது.



இந்நிலையில் ஊதிய உயர்வை சரியான முறையில் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து பாத்திர தொழிலாளர்கள் சங்கம் சார்பில் அனுப்பர்பாளையம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பாத்திர தொழிலாளர்கள் கலந்து கொண்டு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.

Newsletter

பர்மிட் தாமதம், கட்டண குழப்பம்: அமைச்சர் மீது ஆம்னி உரிமையாளர்கள் சாடல்

ஆம்னி பேருந்து அதிக கட்டண வசூல் குற்றச்சாட்டு தொடர்பாக அமைச்சர் இன்றுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை என உரிமையாளர் சங்கம்...

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...