என்னது.. UPI-ல் பணம் செலுத்தவும் கட்டணமா..? - ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது!

வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் UPI பணப்பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்க தேசிய பரிவர்த்தனை கழகம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, மொபைல் வாலட்டில் இருந்து ரூ.2000க்கும் மேல் பணம் செலுத்தும் போது 1.1 சதவீதம், பல்பொருள் அங்காடி - 0.9 சதவீதம், அஞ்சலகம், கல்வி - 0.7 சதவீதம் மற்றும் பெட்ரோல், டீசல் - 0.5 சதவீதம் கட்டணம் வசூலிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.


டெல்லி: வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் UPI பண பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாக தேசிய பரிவர்த்தனை கழகம் அறிவித்துள்ளது.

கொரோனா காலக்கட்டத்திற்கு பின்னர் நடைபாதை வியாபாரிகள் முதல் சிறு கடைகள், தள்ளுவண்டி வியாபாரிகள் என பல தரப்பினரும் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு மாறிவிட்டனர். இதன் காரணமாக ஆன்லைன் மூலம் பணப்பரிவர்த்தனை செய்வது கணிசமாக அதிகரித்துள்ளது. இதில் யுபிஐ பரிவர்த்தனைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இந்நிலையில், யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிப்பதற்கு தேசிய பரிவர்த்தனை கழகம் திட்டமிட்டுள்ளது. இதன்படி, உங்கள் மொபைல் வாலட்டில் (Mobile Wallet) இருந்து வியாபாரிகளுக்கு பணம் செலுத்தினால் அதற்கு 1.1 சதவீத கட்டணம் வசூலிக்க தேசிய பரிவர்த்தனை கழகம் முடிவு செய்துள்ளது. இந்த கட்டண வசூல் விதிமுறைகள் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தேசிய பரிவர்த்தனை கழகத்தின் சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது,

2000 ரூபாய்க்கு மேல் மதிப்பு கொண்ட பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே இந்த 1.1% கட்டணம் வசூலிக்கப்படும்.

உங்கள் மொபைல் வாலட் வழியாக வியாபாரிகளுக்கு 2000 ரூபாய்க்கு மேல் பணம் செலுத்தும் போது அதற்கு 1.1% கட்டணம் வசூலிக்கப்படும். இந்த கட்டண முறை வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட இருக்கிறது.

அதன்படி, பல்பொருள் அங்காடி 0.9 சதவீதமும், தொலைத்தொடர்பு அஞ்சலகம், கல்வி, வேளாண்மை, ரியல் எஸ்டேட் போன்ற பண பரிவர்த்தனைகளுக்கு 0.7 சதவீதமும், எரிபொருள் உபயோகத்திற்கான பணப்பரிவர்த்தனைக்கு 0.5 சதவீதம் கட்டணமும் வசூலிக்கப்படும்.

மேலும், ஒரு நபர் மற்றொரு நபருக்கு பணம் அனுப்புவதற்கு கட்டணம் வசூலிக்கப்படாது. மாறாக, ஒரு நபர் மற்றொரு வியாபாரிக்கு பணம் அனுப்பும் போது மட்டுமே பணம் வசூலிக்கப்படும்.

இந்த கட்டண முறையானது, மொபைல் வாலட்டில் இருந்து பணம் அனுப்பும் போது மட்டுமே வசூலிக்கப்படுமே தவிர, உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து நேரடியாக பணம் அனுப்பும் போது வசூலிக்கப்படாது.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...