திருப்பூரில் சாலை தடுப்புகளை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் - பரபரப்பு

திருப்பூர் - தாராபுரம் இடையே உள்ள புதுரோடு பேருந்து நிறுத்தம் அருகேயுள்ள சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளால் சாலையை கடக்க முடியாத நிலை உள்ளதாக கூறி அப்பகுதி மக்கள், தடுப்புகளை அகற்றக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் புதுரோடு அருகே சாலைகளுக்கு நடுவே உள்ள தடுப்புகளை அகற்றகோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



திருப்பூர் நகர் பகுதியில் இருந்து தாராபுரம் செல்லும் சாலையில் புதுரோடு பேருந்து நிறுத்தம் அமைந்துள்ளது. இந்த பேருந்து நிறுத்தத்திற்கு இருபுறமும் மருதமலை கார்டன், அம்மன் நகர், ஜி என் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏராளமானோர் குடியிருந்து வருகின்றனர்.

இவர்கள் சாலையை கடக்க முடியாத வகையில் சாலையின் நடுவே தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் நீண்ட தூரம் சென்று சாலையை கடக்க வேண்டிய நிலை இருந்து வருகிறது‌. மேலும் பேருந்தில் வந்து இறங்கும் பொதுமக்கள் சாலையை கடக்க முடியாமல் அவதிக்குள்ளாகின்றனர்.



பெண்கள், முதியவர்கள் கடுமையாக பாதிக்கப்படும் வகையில் சாலை தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதை கண்டித்தும், உடனடியாக சாலை நடுவே உள்ள மைய தடுப்புகளை அகற்றி சாலையை கடக்க வசதி செய்து தர வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.



தகவலறிந்து விரைந்து சென்ற நல்லூர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி மைய தடுப்புகளை அகற்றுவதாக உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.


பொதுமக்களின் இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...