திருப்பூரில் சாலை தடுப்புகளை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் - பரபரப்பு

திருப்பூர் - தாராபுரம் இடையே உள்ள புதுரோடு பேருந்து நிறுத்தம் அருகேயுள்ள சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளால் சாலையை கடக்க முடியாத நிலை உள்ளதாக கூறி அப்பகுதி மக்கள், தடுப்புகளை அகற்றக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் புதுரோடு அருகே சாலைகளுக்கு நடுவே உள்ள தடுப்புகளை அகற்றகோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



திருப்பூர் நகர் பகுதியில் இருந்து தாராபுரம் செல்லும் சாலையில் புதுரோடு பேருந்து நிறுத்தம் அமைந்துள்ளது. இந்த பேருந்து நிறுத்தத்திற்கு இருபுறமும் மருதமலை கார்டன், அம்மன் நகர், ஜி என் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏராளமானோர் குடியிருந்து வருகின்றனர்.

இவர்கள் சாலையை கடக்க முடியாத வகையில் சாலையின் நடுவே தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் நீண்ட தூரம் சென்று சாலையை கடக்க வேண்டிய நிலை இருந்து வருகிறது‌. மேலும் பேருந்தில் வந்து இறங்கும் பொதுமக்கள் சாலையை கடக்க முடியாமல் அவதிக்குள்ளாகின்றனர்.



பெண்கள், முதியவர்கள் கடுமையாக பாதிக்கப்படும் வகையில் சாலை தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதை கண்டித்தும், உடனடியாக சாலை நடுவே உள்ள மைய தடுப்புகளை அகற்றி சாலையை கடக்க வசதி செய்து தர வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.



தகவலறிந்து விரைந்து சென்ற நல்லூர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி மைய தடுப்புகளை அகற்றுவதாக உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.


பொதுமக்களின் இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...