திருப்பூரில் சாலை தடுப்புகளை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் - பரபரப்பு

திருப்பூர் - தாராபுரம் இடையே உள்ள புதுரோடு பேருந்து நிறுத்தம் அருகேயுள்ள சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளால் சாலையை கடக்க முடியாத நிலை உள்ளதாக கூறி அப்பகுதி மக்கள், தடுப்புகளை அகற்றக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் புதுரோடு அருகே சாலைகளுக்கு நடுவே உள்ள தடுப்புகளை அகற்றகோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



திருப்பூர் நகர் பகுதியில் இருந்து தாராபுரம் செல்லும் சாலையில் புதுரோடு பேருந்து நிறுத்தம் அமைந்துள்ளது. இந்த பேருந்து நிறுத்தத்திற்கு இருபுறமும் மருதமலை கார்டன், அம்மன் நகர், ஜி என் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏராளமானோர் குடியிருந்து வருகின்றனர்.

இவர்கள் சாலையை கடக்க முடியாத வகையில் சாலையின் நடுவே தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் நீண்ட தூரம் சென்று சாலையை கடக்க வேண்டிய நிலை இருந்து வருகிறது‌. மேலும் பேருந்தில் வந்து இறங்கும் பொதுமக்கள் சாலையை கடக்க முடியாமல் அவதிக்குள்ளாகின்றனர்.



பெண்கள், முதியவர்கள் கடுமையாக பாதிக்கப்படும் வகையில் சாலை தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதை கண்டித்தும், உடனடியாக சாலை நடுவே உள்ள மைய தடுப்புகளை அகற்றி சாலையை கடக்க வசதி செய்து தர வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.



தகவலறிந்து விரைந்து சென்ற நல்லூர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி மைய தடுப்புகளை அகற்றுவதாக உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.


பொதுமக்களின் இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...