திருப்பூரில் சாலை தடுப்புகளை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் - பரபரப்பு

திருப்பூர் - தாராபுரம் இடையே உள்ள புதுரோடு பேருந்து நிறுத்தம் அருகேயுள்ள சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளால் சாலையை கடக்க முடியாத நிலை உள்ளதாக கூறி அப்பகுதி மக்கள், தடுப்புகளை அகற்றக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் புதுரோடு அருகே சாலைகளுக்கு நடுவே உள்ள தடுப்புகளை அகற்றகோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



திருப்பூர் நகர் பகுதியில் இருந்து தாராபுரம் செல்லும் சாலையில் புதுரோடு பேருந்து நிறுத்தம் அமைந்துள்ளது. இந்த பேருந்து நிறுத்தத்திற்கு இருபுறமும் மருதமலை கார்டன், அம்மன் நகர், ஜி என் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏராளமானோர் குடியிருந்து வருகின்றனர்.

இவர்கள் சாலையை கடக்க முடியாத வகையில் சாலையின் நடுவே தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் நீண்ட தூரம் சென்று சாலையை கடக்க வேண்டிய நிலை இருந்து வருகிறது‌. மேலும் பேருந்தில் வந்து இறங்கும் பொதுமக்கள் சாலையை கடக்க முடியாமல் அவதிக்குள்ளாகின்றனர்.



பெண்கள், முதியவர்கள் கடுமையாக பாதிக்கப்படும் வகையில் சாலை தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதை கண்டித்தும், உடனடியாக சாலை நடுவே உள்ள மைய தடுப்புகளை அகற்றி சாலையை கடக்க வசதி செய்து தர வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.



தகவலறிந்து விரைந்து சென்ற நல்லூர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி மைய தடுப்புகளை அகற்றுவதாக உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.


பொதுமக்களின் இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...