கோவை நரசீபுரம் தனியார் கல்லூரியில் புகுந்து மாணவி மீது தாக்குதல் - ஆட்டோ ஓட்டுநர் கைது!

கோவை நரசீபுரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் புகுந்து கல்லூரி மாணவியை தாக்கிய ஷேர் ஆட்டோ ஓட்டுநர் பிரவின் (22) என்பவரை ஆலாந்துறை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


கோவை: நரசிபுரத்தில் தனியார் கல்லூரியில் புகுந்து மாணவியை தாக்கிய ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை மாவட்டம் அறிவொளி நகர் பகுதியை சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவர் நரசீபுரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் (சிஏ) 2ஆம் ஆண்டு படித்து வருகிறார்.

இவரும் கோவைப்புதூர் அறிவொளி நகர் பகுதியை சேர்ந்த ஷேர் ஆட்டோ ஓட்டுநர் பிரவீன் (22) என்பவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே, ஆட்டோ ஓட்டுனர் பிரவீன் மதுபோதைக்கு அடிமையானதன் காரணமாக கடந்த 6 மாதங்களாக இளம்பெண், பிரவீனுடன் பேசுவதை தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று மாலை நரசீபுரம் கல்லூரிக்கு சென்ற பிரவீன் கேன்டீனில் நின்று கொண்டிருந்த மாணவியின் கையை பிடித்து இழுத்து தாக்கியுள்ளார்.

இதையடுத்து அங்கிருந்த மாணவர்கள் பிரவீனை பிடித்து ஆலாந்துறை போலீசில் ஒப்படைத்தனர். தொடர்ந்து, போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், கல்லூரி மாணவியை தாக்கி மிரட்டல் விடுத்த பிரவீனை, கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...