கோவை நரசீபுரம் தனியார் கல்லூரியில் புகுந்து மாணவி மீது தாக்குதல் - ஆட்டோ ஓட்டுநர் கைது!

கோவை நரசீபுரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் புகுந்து கல்லூரி மாணவியை தாக்கிய ஷேர் ஆட்டோ ஓட்டுநர் பிரவின் (22) என்பவரை ஆலாந்துறை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


கோவை: நரசிபுரத்தில் தனியார் கல்லூரியில் புகுந்து மாணவியை தாக்கிய ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை மாவட்டம் அறிவொளி நகர் பகுதியை சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவர் நரசீபுரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் (சிஏ) 2ஆம் ஆண்டு படித்து வருகிறார்.

இவரும் கோவைப்புதூர் அறிவொளி நகர் பகுதியை சேர்ந்த ஷேர் ஆட்டோ ஓட்டுநர் பிரவீன் (22) என்பவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே, ஆட்டோ ஓட்டுனர் பிரவீன் மதுபோதைக்கு அடிமையானதன் காரணமாக கடந்த 6 மாதங்களாக இளம்பெண், பிரவீனுடன் பேசுவதை தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று மாலை நரசீபுரம் கல்லூரிக்கு சென்ற பிரவீன் கேன்டீனில் நின்று கொண்டிருந்த மாணவியின் கையை பிடித்து இழுத்து தாக்கியுள்ளார்.

இதையடுத்து அங்கிருந்த மாணவர்கள் பிரவீனை பிடித்து ஆலாந்துறை போலீசில் ஒப்படைத்தனர். தொடர்ந்து, போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், கல்லூரி மாணவியை தாக்கி மிரட்டல் விடுத்த பிரவீனை, கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...