கோவை நரசீபுரம் தனியார் கல்லூரியில் புகுந்து மாணவி மீது தாக்குதல் - ஆட்டோ ஓட்டுநர் கைது!

கோவை நரசீபுரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் புகுந்து கல்லூரி மாணவியை தாக்கிய ஷேர் ஆட்டோ ஓட்டுநர் பிரவின் (22) என்பவரை ஆலாந்துறை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


கோவை: நரசிபுரத்தில் தனியார் கல்லூரியில் புகுந்து மாணவியை தாக்கிய ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை மாவட்டம் அறிவொளி நகர் பகுதியை சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவர் நரசீபுரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் (சிஏ) 2ஆம் ஆண்டு படித்து வருகிறார்.

இவரும் கோவைப்புதூர் அறிவொளி நகர் பகுதியை சேர்ந்த ஷேர் ஆட்டோ ஓட்டுநர் பிரவீன் (22) என்பவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே, ஆட்டோ ஓட்டுனர் பிரவீன் மதுபோதைக்கு அடிமையானதன் காரணமாக கடந்த 6 மாதங்களாக இளம்பெண், பிரவீனுடன் பேசுவதை தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று மாலை நரசீபுரம் கல்லூரிக்கு சென்ற பிரவீன் கேன்டீனில் நின்று கொண்டிருந்த மாணவியின் கையை பிடித்து இழுத்து தாக்கியுள்ளார்.

இதையடுத்து அங்கிருந்த மாணவர்கள் பிரவீனை பிடித்து ஆலாந்துறை போலீசில் ஒப்படைத்தனர். தொடர்ந்து, போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், கல்லூரி மாணவியை தாக்கி மிரட்டல் விடுத்த பிரவீனை, கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...

கோவை மாவட்டத்தில் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களிப்பு

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களித்துள்ளனர். கவு...

காரமடை ரயில் நிலைய விரிவாக்கப் பணிக்காக தோலம்பாளையம் ரயில்வே கேட் காலவரையின்றி மூடல்

காரமடை ரயில் நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் புதிய பிளாட்பாரம் கட்டுமானத்திற்காக காரமடை - தோலம்பாளையம் இடையேயான ரயில்வே க...