தாராபுரத்தில் அரசு ஊழியர்கள் அடையாள வேலை நிறுத்தம் - பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரிக்கை!

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில், காலமுறை ஊதியம், சட்டப்பூர்வ ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.


திருப்பூர்: பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.



தாராபுரம் தாலுகா அலுவலக நுழைவாயில் முன்பாக இந்த ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. இதில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அனைவருக்கும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைக்காக கடந்த 20 ஆண்டுகள் போராட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.



காலமுறை ஊதியம், சட்டப்பூர்வ ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும். பணிநீக்க காலத்தை முறைப்படுத்த வேண்டும். சரண்டர் விடுப்பு ஊதியம், ஊதியமற்ற நிலுவை உள்ளிட்ட ஜீவ காருண்யா கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.



மேலும், சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய் கிராம உதவியாளர், ஊராட்சி செயலாளர், நூலகர் உள்ளிட்ட பணிகளுக்கு சிறப்பு காலம் வரை மற்றும் தொகுப்பு ஊதியம் மதிப்பூதியம் பெற்று வரும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கக்கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...