சூலூரில் குடிக்க பணம் கொடுக்க மறுத்த வருவாய் அதிகாரி பைக் திருட்டு - இளைஞரின் சிசிடிவி காட்சி வைரல்!

சூலூர் அருகே குடிப்பதற்கு பணம் கேட்டு கொடுக்க மறுத்த வருவாய் அதிகாரியின் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வரும் நிலையில், திருடிச் சென்ற சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


கோவை: சூலூர் அருகே குடிக்க பணம் கொடுக்க மறுத்த வருவாய் அதிகாரியின் இருசக்கர வாகனத்தை இளைஞர் ஒருவர் திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் சூலூர் அருகே அரசூர் மாரியம்மன் கோவில் அருகே ஊராட்சி மன்ற அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு சென்ற அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர், வருவாய் அலுவலரிடம் மது குடிப்பதற்காக ரூ.50 பணம் கேட்டுள்ளார்.

ஏற்கனவே அந்த இளைஞர் அதிக போதையில் இருந்ததால், வருவாய் அதிகாரி பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், அலுவலகத்திற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வருவாய் அதிகாரியின் இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு தப்பிச்சென்றுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக, வருவாய் அதிகாரி சூலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ள காட்சிகளின் அடிப்படையில் இருசக்கர வாகனத்தை திருடிச்சென்ற இளைஞரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

குடிக்க பணம் கொடுக்க மறுத்த அதிகாரியின் இருசக்கர வாகனத்தை இளைஞர் திருடிச்செல்லும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...