சூலூரில் குடிக்க பணம் கொடுக்க மறுத்த வருவாய் அதிகாரி பைக் திருட்டு - இளைஞரின் சிசிடிவி காட்சி வைரல்!

சூலூர் அருகே குடிப்பதற்கு பணம் கேட்டு கொடுக்க மறுத்த வருவாய் அதிகாரியின் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வரும் நிலையில், திருடிச் சென்ற சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


கோவை: சூலூர் அருகே குடிக்க பணம் கொடுக்க மறுத்த வருவாய் அதிகாரியின் இருசக்கர வாகனத்தை இளைஞர் ஒருவர் திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் சூலூர் அருகே அரசூர் மாரியம்மன் கோவில் அருகே ஊராட்சி மன்ற அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு சென்ற அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர், வருவாய் அலுவலரிடம் மது குடிப்பதற்காக ரூ.50 பணம் கேட்டுள்ளார்.

ஏற்கனவே அந்த இளைஞர் அதிக போதையில் இருந்ததால், வருவாய் அதிகாரி பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், அலுவலகத்திற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வருவாய் அதிகாரியின் இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு தப்பிச்சென்றுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக, வருவாய் அதிகாரி சூலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ள காட்சிகளின் அடிப்படையில் இருசக்கர வாகனத்தை திருடிச்சென்ற இளைஞரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

குடிக்க பணம் கொடுக்க மறுத்த அதிகாரியின் இருசக்கர வாகனத்தை இளைஞர் திருடிச்செல்லும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

தாய்லாந்து சர்வதேச ஜூனியர் மாடல் போட்டியில் கோவை சிறுவன் ரக்‌ஷனுக்கு 2-ம் இடம்

தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச ஜூனியர் மாடல் போட்டியில், இந்தியா சார்பில் தமிழகத்தில் இருந்து பங்கேற்ற ஒரே போட்டியாளராக ‌...

மோசடி வழிகளில் நடைபெறும் மதமாற்றத்தைத் தடுக்க சட்டம் தேவை: கோவையில் VHP பொதுச்செயலாளர் மிலிந்த் பரந்தே

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் (VHP) சார்பில் நடைபெற்ற இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழாவில் பங்கேற்ற மிலிந்த் பரந்தே, கோயி...

வாட்ஸ்-அப் மூலம் கேரளா லாட்டரி சூதாட்டம்: உக்கடத்தில் வாலிபர் கைது; 2 ஸ்மார்ட்போன்கள் பறிமுதல்

கோவை உக்கடம் புதிய பஸ் நிலைய கழிப்பறை அருகே வாட்ஸ்-அப் குழுக்கள் மூலம் கேரளா லாட்டரி எண்களை விற்பனை செய்து சட்டவிரோதமாக...

சித்தாபுதூரில் பணம் வைத்து சூதாட்டம்: 6 பேர் கைது; 159 சீட்டுகள், ரூ.3,700 பறிமுதல்

கோவை சித்தாபுதூர் என்.ஜி.என். தெருவில் பணம் வைத்து சட்டவிரோதமாக சீட்டாடியதாகக் கூறப்படும் 6 பேரை காட்டூர் போலீசார் கைது...

Park Institutions Students Gain Practical Cybersecurity Exposure

Park Institutions organised a seminar on Enterprise Vulnerability Management, providing 150 students from the Computer S...

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...