நுகர்வோர் பாதுகாப்பு தினம்: மார்ச் 29-ல் மாவட்ட ஆட்சியரகத்தில் கொண்டாட்டம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு!

கோவை மாவட்ட அளவிலான ஒருங்கிணைந்த தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினம் மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா வரும் மார்ச் 29ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாணவ மாணவிகளுக்கான கவிதை, ஓவிய போட்டிகளுடன் நடைபெற உள்ளதாக, ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.


கோவை: கோவையில் வரும் மார்ச் 29ஆம் தேதி மாவட்ட அளவிலான ஒருங்கிணைந்த தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினம் மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தினவிழா நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கோவை மாவட்டத்தில், 2022-2023 ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான ஒருங்கிணைந்த தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினம் மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தினவிழா வரும் 29ஆம் தேதி மாலை 3 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

இவ்விழாவில் நுகர்வோர் விழிப்புணர்வு தொடர்பான தலைப்புகளில் கவிதை போட்டி, கட்டுரை போட்டி, ஓவிய போட்டிகளில் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளது.

பொது சுகாதாரத்துறை, உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு துறை, சட்டமுறை எடையளவுகள் துறை மற்றும் இந்திய தர நிர்ணய அமைவனம், மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் போன்ற அரசுத் துறையினர் மற்றும் மாவட்ட முகவரிப் பட்டியலில் இடம்பெற்றுள்ள தன்னார்வ நுகர்வோர் அமைப்பினர் கலந்து கொண்டு நுகர்வோர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் கண்காட்சி மற்றும் நேரடி விளக்க செயல்பாடுகள் மற்றும் சிறப்புரை ஆற்ற உள்ளனர்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...