பல்லடம் அருகே மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான மாவட்ட அளவிலான ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டி!

பல்லடம் அருகேயுள்ள அருள்புரத்தில் பாரம்பரிய உணவுகள், ஊட்டச்சத்து மிக்க உணவுகளை ஊக்குவிக்கும் விதமாக நடைபெற்ற மாவட்ட அளவிலான ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்ற மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.



திருப்பூர்: பல்லடம் அருகே மகளிர் சுய உதவி குழுக்களுக்கான மாவட்ட அளவிலான ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டி நடைபெற்றது.

தமிழ்நாடு மகளிர்‌ மேம்பாட்டு நிறுவனம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில், மாவட்ட அளவிலான ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டத்துக்கு உட்பட்ட அருள்புரத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டி நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில் திருப்பூர், உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம், தாராபுரம், காங்கேயம் ஆகிய பகுதிகளிலிருந்து ஏராளமான மகளிர் சுய உதவி குழுக்கள் கலந்து கொண்டன.



இதில், பாரம்பரியமான சிறு தானிய உணவு வகைகள், திருமணமான புதுமண தம்பதிகள் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவு முறைகள், குழந்தைகள் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள் என விதவிதமான உணவு முறைகளை போட்டியாளர்கள் காட்சிப்படுத்தினர்.



எள் உருண்டை, சிறுதானிய பாயாசம், கடலை உருண்டை, சத்துமாவு பாயாசம், காய்கறி சூப் போன்ற பல்வேறு விதமான உணவு வகைகளை போட்டியில் காட்சிப்படுத்தப்பட்டன.

போட்டியில் வெற்றி பெறுபவர்கள் அடுத்ததாக வட்டார அளவிலான போட்டியிலும், அதில் வெற்றி பெறும் குழுவினர் மாவட்ட அளவிலான போட்டிகளிலும் மாநில அளவிலான போட்டிகளிலும் பங்கு பெற அழைத்துச் செல்லப்படுவர் என மகளிர் திட்டத்தின் உதவி திட்ட அலுவலர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...