தாராபுரம் அருகேயுள்ள காளியம்மன் கோவில் குடமுழுக்கு விழா - திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தாராபுரம் அருகேயுள்ள கொங்கூர் கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த காளியம்மன் திருக்கோயில் புனரமைக்கும் பணிகள் முடிவடைந்த நிலையில், இன்று குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


திருப்பூர்: தாராபுரம் அருகே கொங்கூர் காளியம்மன் திருக்கோயில் குடமுழுக்கு விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள கொங்கூர் கிராமத்தில் பழமை வாய்ந்த கொங்கூர் காளியம்மன் திருக்கோயில் உள்ளது. இந்த கோயிலில் கடந்த சில வருடங்களாக புனரமைக்கும் பணி நடைபெற்று வந்தது.



இந்நிலையில் கோயில் பணிகள் முழுவதும் நிறைவடைந்து, இன்று குடமுழுக்கு விழா நடைபெற்றது. முன்னதாக காலை கணபதி ஓமம் நடத்தப்பட்டு, சிவன் கோவில் மற்றும் காளியம்மன் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.



அதன் பிறகு திருக்கோயில் கோபுரத்திற்கு கலச நீர் ஊற்றப்பட்டு பக்தர்கள் மீது தீர்த்தம் தெளிக்கப்பட்டது. இந்த குடமுழுக்கு விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...