தனியார் பொருட்காட்சி நடத்த உடுமலை குட்டை திடல் ரூ.65 லட்சத்திற்கு ஏலம்!

உடுமலை மாரியம்மன் கோயில் தேர்த் திருவிழா ஏப்ரல் 4ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில், அங்கு தனியார் பொருட்காட்சி நடத்த விடப்பட்ட ஏலத்தில் குட்டைத்திடல் ரூ.65.40 லட்சத்திற்கு ஏலம் போனது.


திருப்பூர்: உடுமலை குட்டை திடலில் தனியார் பொருட்காட்சி நடத்துவதற்காக ரூ.65.40 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை மாரியம்மன் கோயில் தேர்த் திருவிழா ஏப்ரல் 4ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி, தனியார் பொருட்காட்சி நடத்துவதற்காக குட்டைத் திடல் ஏலம் இன்று உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் கண்ணாமணி தலைமையில் நடைபெற்றது.



குறைந்தபட்ச ஏலத்தொகையாக ரூ.46 லட்சம் நிர்ணயிக்கப்பட்டது. இதில் நான்கில் ஒரு பங்கு தொகையான ரூ.11.50 லட்சத்தை அச்சாரத் தொகையாக செலுத்த வேண்டும் என வட்டாட்சியர் தெரிவித்திருந்த நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 11 பேர் அச்சார தொகையான 11.50 லட்சம் டி.டி எடுத்து ஏலத்தில் கலந்து கொண்டனர்.



சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த ஏலத்தின் முடிவில் வாணியம்பாடியை சேர்ந்த மோகன் என்பவர் ரூ.65 லட்சத்திற்கு 40 ஆயிரத்திற்கு குட்டை திடல் பகுதியில் பொருட்காட்சி அமைக்க ஏலம் எடுத்தார்.

கடந்தாண்டு குட்டை திடல் ரூ.41 லட்சத்திற்கு ஏலம் போன நிலையில் இந்தாண்டு கூடுதலாக ரூ.46 லட்சம் ஏல உரிமைத்தொகை நிர்ணயிக்கப்பட்ட நிலையில் பரபரப்பான ஏலம் மூலமாக ரூ.65 லட்சத்து 40 ஆயிரத்துக்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...