நீலகிரியில் 5வது நாளாக தொடரும் போராட்டம் - மரத்திற்கு மனு வழங்கிய அரசு பூங்கா பணியாளர்கள்!

பணி நிரந்தரம், கால முறை ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நீலகிரியில் 5வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அரசு பூங்கா பணியாளர்கள் மற்றும் பண்ணை பணியாளர்கள், பழமை வாய்ந்த மரத்திற்கு மனு அளித்து நூதன போராட்டம்.



நீலகிரி: பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பூங்கா மற்றும் பண்ணை பணியாளர்கள் 5வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு பூங்கா மற்றும் பண்ணை பணியாளர்கள் பணி நிரந்தரம், கால முறை ஊதியம், மாவட்ட நிர்வாகம் நிர்ணயம் செய்துள்ள ஊதியம் வழங்குதல். பணி மூப்பு அடிப்படையில் ஊக்கத்தொகை உயர்த்தி வழங்க வேண்டும்.



சம வேலைக்கு சம ஊதியம் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 23ஆம் தேதி முதல் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் தொழிலாளர்கள் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



5வது நாளாக போராட்டம் நீடித்துவரும் நிலையில், இதுவரை இவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளதால் அறவழி போராட்டம், ஒப்பாரி வைத்து போராட்டம், கண்டன கோஷம் எழுப்பும் போராட்டம் என பல கட்ட போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தமிழக அரசோ, மாவட்ட நிர்வாகமோ, தோட்ட கலைத்துறை அதிகாரிகளிடம் இருந்தோ இந்த போராட்டத்திற்கு எவ்வித பதிலும் இல்லை என்று கூறி 5வது நாளாக பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



இந்தநிலையில், பூங்கா ஊழியர்கள் பூங்காவில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த மரமான தேவதாரி மரத்திற்கு ஊர்வலமாக சென்று கண்ணீருடன் மனு அளித்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும் என பூங்கா ஊழியர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...