கோத்தகிரியில் கால்நடைகளுக்கான ‘உப்பு ஹட்டுவ’ பண்டிகை - படுகர் இனமக்கள் உற்சாக கொண்டாட்டம்!

கோத்தகிரி அருகேயுள்ள கடைகம்பட்டி, ஜக்கலோடை உள்ளிட்ட பல்வேறு படுகர் இன மக்கள், கால்நடைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி, உப்பு ஹட்டுவ பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர்.


நீலகிரி: கோத்தகிரியில் கால்நடைகள் நோயின்றி வாழ வேண்டி படுகர் இன மக்கள் உப்பு ஹட்டுவ பண்டிகையை கோலாகலமாக கொண்டாடினர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கடைகம்பட்டி, ஜக்கலோடை உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படுகர் கிராம மக்கள் உப்பு ஹட்டுவ பண்டிகையை இன்று சிறப்பாக கொண்டாடினர்.



அதையொட்டி, காலையில் அவரவர் வீட்டில் இருந்து கொண்டு வந்த உப்பு, பச்சை கடலை, புல் ஆகியவற்றை தண்ணீரில் கரைத்தனர்.



பின்னர் அந்த தண்ணீரை பாத்திரங்களில் எடுத்து சென்று மாடுகளுக்கு வழங்கி வழிபட்டனர்.



இதையடுத்து, அனைவரும் இயற்கை தெய்வத்தை வழிபட்டு, காடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட இலை, செடிகளை, வீட்டுக்கு கொண்டு வந்து முற்றத்தில் கட்டி தொங்கவிட்டனர்.

இதன் மூலம் நோய், நொடிகள் வராமல் இருக்கும் என்பது ஐதீகம். மேலும், உப்பு தண்ணீர் குடிப்பதால் மாடுகள் காலை முதல் மாலை வரை மேய்ச்சலுக்கு எங்கு சென்றாலும் வீட்டுக்கு வந்துவிடும் என்பது இந்த மக்களின் நம்பிக்கையாகும்.

பின்னர், வீட்டில் பாயாசம் தயாரித்து தங்கள் ஊரில் உள்ள பொதுமக்களுக்கு படுகர் இன மக்கள் வழங்கி மகிழ்ந்தனர்.



ஒவ்வொரு ஆண்டும் படுகர் இன மக்களின் சகோதரத்துவத்தை உணர்த்தும் வகையில் இந்த பண்டிகை கொண்டாடப்படுவதுடன், அதன் மூலம் வறட்சி நீங்கி, மழை பொழிந்து, ஆரோக்கியம் மேம்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...