கோவையில் 1.5 டன் ரேஷன் அரிசி கடத்திய நபர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!

கோவையில் இருந்து கேரளாவுக்கு 1.5 டன் ரேஷன் அரிசியை கடத்திச் செல்ல முயன்ற வெள்ளாளப்பட்டியை சேர்ந்த பாபுவை (47) போலீசார் கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி கைது செய்த நிலையில், மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.



கோவை: கோவையிலிருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்த முயன்றதாக ஏற்கனவே கைது செய்யப்பட்ட நபர், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு கூடுதல் டி.ஜி.பி., அருண் உத்தரவின்பேரில், கோவையில் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடுவோர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் கோவை சேரன்நகர் பகுதியில் கடந்த மாதம் 27 ம் தேதி, 1.5 டன் ரேஷன் அரிசியை கோவை வெள்ளாளப்பட்டியை சேர்ந்த பாபு (47) கேரளாவிற்கு கடத்த முயன்றார்.

அப்போது, அவரை கோவை குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அவர் மீது கோவை, பொள்ளாச்சியில் உள்ள காவல் நிலையங்களில் 13 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, பாபுவை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு போலீசார், கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணனிடம் பரிந்துரை செய்தனர். அதன்பேரில், பாபுவை குண்டர் சட்டத்தில் அடைக்க மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார்.

இதனைதொடர்ந்து, சிறையில் உள்ள பாபுவிடம் குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கான உத்தரவு நகலை போலீசார் வழங்கினர்.

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் மத்திய மண்டல தூய்மைப் பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மத்திய மண்டலத்தின் வார்டு 48ல் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்து, தூய்மைப் பணியாளர்களுக...

ஒண்டிப்புதூரில் ரயில்வே மேம்பாலம் அமைக்கக் கோரி மக்கள் போராட்டம்; கிழக்கு மண்டல அலுவலகம் முற்றுகை

கோவை ஒண்டிப்புதூர் சூர்யா நகர் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் சிங்காநல்லூர் கிழக்கு...

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...