கோவை 22வது வார்டில் தார் சாலை புதுப்பித்தல் பணிகளை தொடங்கி வைத்த அமைச்சர் செந்தில்பாலாஜி!

கோவை மாநகராட்சியின் 22வது வார்டுக்கு உட்பட்ட குமுதம் நகரில் TURIF - 2022-23 திட்டத்தின் கீழ் பிரதான சாலை மற்றும் குறுக்கு சாலைகளில் தார்சாலை புதுப்பித்தல் பணிகளை மதுவிலக்கு மற்றும் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்.


கோவை: கோவை மாநகராட்சியின் 22வது வார்டில் தார்ச்சாலை புதுப்பித்தல் பணிகளை அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்.

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட 22 ஆவது வார்டு குமுதம் நகரில் உள்ள பிரதான சாலை மற்றும் குறுக்கு சாலைகளுக்கு TURIF - 2022-23 திட்டத்தின் கீழ், தார் சாலை புதுப்பித்தல் பணிகள் துவக்க விழா நேற்றைய தினம் (25.03.2023) நடைபெற்றது.

இந்த நிகழ்வில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு திட்டப் பணிகளை துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், கோயம்புத்தூர் மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி துணை மேயர் வெற்றி செல்வன், கிழக்கு மண்டலத் தலைவர் இலக்குமி இளஞ்செல்வி மற்றும் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மாநகராட்சி துணை ஆணையாளர் மரு.மோ.ஷர்மிளா ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் இந்த விழாவில், கவுண்டம்பாளையம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டி, வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, வடக்கு மாவட்ட கழக துணைச் செயலாளர் அசோக் பாபு, 22 வது வார்டு மாமன்ற உறுப்பினர் கோவை பாபு,

6வது வார்டு மாமன்ற உறுப்பினர் பொன்னுசாமி, 5 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் நவீன் குமார், 24 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பூபதி, 22 வது வார்டு வட்டச் செயலாளர் பிரபாகரன், 8 வது வார்டு வட்டச் செயலாளர் வினோத் குமார், மாவட்ட பிரதிநிதி செல்வராஜ், 22 வது வார்டு அவைத் தலைவர் ஆனந்த குமார், துணை ஆணையாளர் முத்துராமலிங்கம், சுகாதாரத்துறை ஆய்வாளர் ஜெரால்டு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...