உடுமலையில் மின்வாரிய ஊழியர் போல் நடித்து மோசடி - புகைப்படம் வெளியீடு!

உடுமலை பகுதியில் மின்வாரிய ஊழியர் போல் நடித்து புதிய மின் இணைப்புக்கு பணம் பறிக்கும் நபரின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கவனமுடன் இருக்குமாறு மின்வாரிய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: உடுமலை பகுதியில் மின்வாரிய ஊழியர் போல் நடித்து பணம் பறிக்கும் நபரின் புகைப்படம் வெளியிடப்பட்டு உள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த எஸ்.வி.புரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் புதிதாக மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்திருந்தனர். இதனையடுத்து ஆரம்ப கட்ட பணிகளை மின் வாரியத்தினர் செய்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று அந்த வீட்டுக்கு மொபட்டில் வந்த நபர் ஒருவர் தன்னை மின்வாரிய ஊழியர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். மேலும் புதிய மின்இணைப்புக் கட்டணமாக ரூ.5 ஆயிரத்து 500 உடனடியாக கட்ட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அவருடைய மொபட்டில் பழைய மின்மீட்டர்கள் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் பயன்படுத்தும் பொருட்கள் இருந்ததால் அவரை நம்பி பணம் கொடுத்துள்ளனர். இதுபோல உடுமலை நகரில் பல பகுதிகளில் புதிய மின் இணைப்பு மற்றும் கூடுதல் மின் இணைப்புகளுக்குப் பணம் பெற்றுள்ளார்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததன் அடிப்படையில் அருகிலுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, அந்த நபரின் உருவப்படத்தை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அந்த படத்தை தற்போது வெளியிட்டு பொதுமக்கள் யாரும் இந்த மோசடி நபரிடம் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் என்று மின்வாரிய அதிகாரிகள் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...