உடுமலையில் மின்வாரிய ஊழியர் போல் நடித்து மோசடி - புகைப்படம் வெளியீடு!

உடுமலை பகுதியில் மின்வாரிய ஊழியர் போல் நடித்து புதிய மின் இணைப்புக்கு பணம் பறிக்கும் நபரின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கவனமுடன் இருக்குமாறு மின்வாரிய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: உடுமலை பகுதியில் மின்வாரிய ஊழியர் போல் நடித்து பணம் பறிக்கும் நபரின் புகைப்படம் வெளியிடப்பட்டு உள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த எஸ்.வி.புரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் புதிதாக மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்திருந்தனர். இதனையடுத்து ஆரம்ப கட்ட பணிகளை மின் வாரியத்தினர் செய்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று அந்த வீட்டுக்கு மொபட்டில் வந்த நபர் ஒருவர் தன்னை மின்வாரிய ஊழியர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். மேலும் புதிய மின்இணைப்புக் கட்டணமாக ரூ.5 ஆயிரத்து 500 உடனடியாக கட்ட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அவருடைய மொபட்டில் பழைய மின்மீட்டர்கள் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் பயன்படுத்தும் பொருட்கள் இருந்ததால் அவரை நம்பி பணம் கொடுத்துள்ளனர். இதுபோல உடுமலை நகரில் பல பகுதிகளில் புதிய மின் இணைப்பு மற்றும் கூடுதல் மின் இணைப்புகளுக்குப் பணம் பெற்றுள்ளார்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததன் அடிப்படையில் அருகிலுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, அந்த நபரின் உருவப்படத்தை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அந்த படத்தை தற்போது வெளியிட்டு பொதுமக்கள் யாரும் இந்த மோசடி நபரிடம் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் என்று மின்வாரிய அதிகாரிகள் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...