உடுமலையில் மின்வாரிய ஊழியர் போல் நடித்து மோசடி - புகைப்படம் வெளியீடு!

உடுமலை பகுதியில் மின்வாரிய ஊழியர் போல் நடித்து புதிய மின் இணைப்புக்கு பணம் பறிக்கும் நபரின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கவனமுடன் இருக்குமாறு மின்வாரிய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: உடுமலை பகுதியில் மின்வாரிய ஊழியர் போல் நடித்து பணம் பறிக்கும் நபரின் புகைப்படம் வெளியிடப்பட்டு உள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த எஸ்.வி.புரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் புதிதாக மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்திருந்தனர். இதனையடுத்து ஆரம்ப கட்ட பணிகளை மின் வாரியத்தினர் செய்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று அந்த வீட்டுக்கு மொபட்டில் வந்த நபர் ஒருவர் தன்னை மின்வாரிய ஊழியர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். மேலும் புதிய மின்இணைப்புக் கட்டணமாக ரூ.5 ஆயிரத்து 500 உடனடியாக கட்ட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அவருடைய மொபட்டில் பழைய மின்மீட்டர்கள் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் பயன்படுத்தும் பொருட்கள் இருந்ததால் அவரை நம்பி பணம் கொடுத்துள்ளனர். இதுபோல உடுமலை நகரில் பல பகுதிகளில் புதிய மின் இணைப்பு மற்றும் கூடுதல் மின் இணைப்புகளுக்குப் பணம் பெற்றுள்ளார்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததன் அடிப்படையில் அருகிலுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, அந்த நபரின் உருவப்படத்தை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அந்த படத்தை தற்போது வெளியிட்டு பொதுமக்கள் யாரும் இந்த மோசடி நபரிடம் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் என்று மின்வாரிய அதிகாரிகள் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை துப்பாக்கி சூடு வீரர்கள் 168 பதக்கங்கள் வென்று சாதனை

சென்னையில் நடைபெற்ற 51வது மாநில அளவிலான ரைபிள், பிஸ்டல் துப்பாக்கி சூடு போட்டியில் கோவை வீரர்கள் 168 பதக்கங்களை வென்றனர்...

கோவை குனியமுத்தூர் அருகே ஜவுளிக்கடை மேலாளருக்கு கத்திக்குத்து; தொழிலாளி கைது

கோவை குனியமுத்தூர் அருகே ஜவுளிக்கடை மேலாளரை கத்தியால் தாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். படுக...

கோவை மாநகராட்சி ஆணையர் மத்திய மண்டல தூய்மைப் பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மத்திய மண்டலத்தின் வார்டு 48ல் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்து, தூய்மைப் பணியாளர்களுக...

ஒண்டிப்புதூரில் ரயில்வே மேம்பாலம் அமைக்கக் கோரி மக்கள் போராட்டம்; கிழக்கு மண்டல அலுவலகம் முற்றுகை

கோவை ஒண்டிப்புதூர் சூர்யா நகர் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் சிங்காநல்லூர் கிழக்கு...

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...