உடுமலையில் மின்வாரிய ஊழியர் போல் நடித்து மோசடி - புகைப்படம் வெளியீடு!

உடுமலை பகுதியில் மின்வாரிய ஊழியர் போல் நடித்து புதிய மின் இணைப்புக்கு பணம் பறிக்கும் நபரின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கவனமுடன் இருக்குமாறு மின்வாரிய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: உடுமலை பகுதியில் மின்வாரிய ஊழியர் போல் நடித்து பணம் பறிக்கும் நபரின் புகைப்படம் வெளியிடப்பட்டு உள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த எஸ்.வி.புரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் புதிதாக மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்திருந்தனர். இதனையடுத்து ஆரம்ப கட்ட பணிகளை மின் வாரியத்தினர் செய்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று அந்த வீட்டுக்கு மொபட்டில் வந்த நபர் ஒருவர் தன்னை மின்வாரிய ஊழியர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். மேலும் புதிய மின்இணைப்புக் கட்டணமாக ரூ.5 ஆயிரத்து 500 உடனடியாக கட்ட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அவருடைய மொபட்டில் பழைய மின்மீட்டர்கள் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் பயன்படுத்தும் பொருட்கள் இருந்ததால் அவரை நம்பி பணம் கொடுத்துள்ளனர். இதுபோல உடுமலை நகரில் பல பகுதிகளில் புதிய மின் இணைப்பு மற்றும் கூடுதல் மின் இணைப்புகளுக்குப் பணம் பெற்றுள்ளார்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததன் அடிப்படையில் அருகிலுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, அந்த நபரின் உருவப்படத்தை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அந்த படத்தை தற்போது வெளியிட்டு பொதுமக்கள் யாரும் இந்த மோசடி நபரிடம் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் என்று மின்வாரிய அதிகாரிகள் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...

பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினமும் வனங்கள் தினமும் சிறப்பாக கொண்டாடப்பட்டன

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் 28 மார்ச் 2026...

கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் 17வது ஆண்டு விளையாட்டு தினம் சிறப்பாக நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் 28 மார்ச் 2026 அன்று 17வது ஆண்டு விளையாட்டு தினத்தை கொண்டாடியது. நிறு...

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...