குண்டடம் வாரச்சந்தையில் ஆடுகள் வரத்து அதிகரிப்பு - விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை!

தாராபுரம் அடுத்த குண்டடம் சந்தையில், சனிக்கிழமை தோறும் ஆடு, கோழி விற்பனை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இன்று அதிகளவில் ஆடுகள் வரத்து காரணமாக விலை குறைந்து விற்பனையானதால், விவசாயிகள் வேதனை அடைந்தனர்.


திருப்பூர்: குண்டடம் வாரச்சந்தைக்கு ஆடுகளின் வரத்து அதிகரிப்பால் விலையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த குண்டடத்தில் சனிக்கிழமை தோறும் அதிகாலை 2 மணி முதல் 8 மணி வரை ஆடு, கோழிகள் விற்பனை நடைபெறுவது வழக்கம்.



இந்த சந்தைக்கு குண்டடம், ஊதியூர், கொடுவாய், மேட்டுக்கடை, சூரியநல்லூர், பூளவாடி, பெல்லம்பட்டி, தாராபுரம், பல்லடம், பொங்கலூர் பகுதிகளிலிருந்து வியாபாரிகள், விவசாயிகள் வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.



ஆடுகளை வாங்குவதற்காக திருப்பூர், கோவை, பொள்ளாச்சி, உடுமலை, பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் வருகின்றனர். இவர்கள் இங்கு ஆடுகளை வாங்கி விற்பனைக்காகவும், இறைச்சிக்காகவும் கொண்டு செல்கின்றனர்.

இந்நிலையில் வெயில் அதிகரிப்பால் காடுகளில் மேய்ச்சல் குறைய தொடங்கியுள்ளது. இதனால் விற்பனைக்கு அதிகளவில் ஆடுகள் கொண்டு வரப்பட்டன. மேலும் பங்குனி உத்திரத்தையொட்டி இறைச்சி கடைகளில் விற்பனை குறைவாக இருப்பதால் இறைச்சி விற்பனையாளர்கள் ஆடுகளை வாங்குவதில் ஆர்வம் கட்டாததால் விலையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது.

இதனால் கடந்த வாரங்களில் இறைச்சிக்காக வாங்கப்படும் 10 கிலோ எடையுள்ள ஆடு ரூ.7ஆயிரத்துக்கு விலை போனது. ஆனால் இந்த வாரம் ரூ.6 ஆயிரத்திற்கு விலைபோயுள்ளது. ரூ.12 ஆயிரத்திற்கு விற்கப்பட்டு வந்த குட்டியுடன் கூடிய பெரிய ஆடுகள் இந்த வாரம் ரூ.9ஆயிரத்துக்கு விற்பனையானது.

அதேபோல் கோழிகளையும் அதிகளவில் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். கோழியின் எடைக்கு தகுந்தாற்போல விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இறைச்சிக்கு விற்கும் கோழிகள் கடந்த வாரம் 1 கிலோ ரூ.350 முதல் ரூ. 450 வரை விலைபோனது. இந்தவாரம் 1 கிலோ ரூ.500 முதல் ரூ.530 வரை விலைபோனது.

நல்ல வீரியத்துடன் சண்டையிடும் கருங்கால்பொன்றம், மயில், காகம் போன்ற நிறத்துடன் உள்ள சேவல்களை சண்டையிட்டுப் பார்த்து அதிக விலைக்கு வாங்கி சென்றனர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...