தாராபுரத்தில் ரூ.1.07 கோடி மதிப்பிலான வளர்ச்சித்திட்ட பணிகளுக்கான பூமி பூஜை - அமைச்சர் கயல்விழி பங்கேற்பு!

தாராபுரம் தொகுதிக்கு உட்பட்ட சின்னக்கம்பாளையம், கொட்டமுத்தம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.1.07கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அடிக்கல் நாட்டினார்.



திருப்பூர்: தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் ரூ.1.07 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அமைச்சர் கயல்விழி அடிக்கல் நாட்டினார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சின்னக்கம்பாளையம், கொட்டமுத்தம்பாளையம் கிராமங்களில் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் நியாய விலை கடை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை, சீலநாயக்கன்பட்டியில் இருந்து தார்ச்சாலை அமைக்க ரூ.50 லட்சம் மதிப்பிலான பணிக்குப் பூமி பூஜை நடைபெற்றது.



அதைத் தொடர்ந்து குருவப்ப நாயக்கன் பாளையம் பகுதியில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய நலக்கூடம், தாராபுரம் வசந்தம் நகர் பகுதியில் ஊராட்சி ஒன்றிய மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 13.50 லட்சம் மதிப்பில் தார்ச் சாலை என மொத்தம் ரூ.1.07 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்ட வளர்ச்சிப் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.



இந்த பணிகளை தாராபுரம் சட்டமன்ற உறுப்பினரும், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சருமான கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினர்.

இந்நிகழ்ச்சியில் தாராபுரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் செந்தில்குமார் மற்றும் துணைத் தலைவர் சசிகுமார் திமுக இளைஞரணி அமைப்பாளர் சன் பாலு உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...