தாராபுரத்தில் ரூ.1.07 கோடி மதிப்பிலான வளர்ச்சித்திட்ட பணிகளுக்கான பூமி பூஜை - அமைச்சர் கயல்விழி பங்கேற்பு!

தாராபுரம் தொகுதிக்கு உட்பட்ட சின்னக்கம்பாளையம், கொட்டமுத்தம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.1.07கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அடிக்கல் நாட்டினார்.



திருப்பூர்: தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் ரூ.1.07 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அமைச்சர் கயல்விழி அடிக்கல் நாட்டினார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சின்னக்கம்பாளையம், கொட்டமுத்தம்பாளையம் கிராமங்களில் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் நியாய விலை கடை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை, சீலநாயக்கன்பட்டியில் இருந்து தார்ச்சாலை அமைக்க ரூ.50 லட்சம் மதிப்பிலான பணிக்குப் பூமி பூஜை நடைபெற்றது.



அதைத் தொடர்ந்து குருவப்ப நாயக்கன் பாளையம் பகுதியில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய நலக்கூடம், தாராபுரம் வசந்தம் நகர் பகுதியில் ஊராட்சி ஒன்றிய மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 13.50 லட்சம் மதிப்பில் தார்ச் சாலை என மொத்தம் ரூ.1.07 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்ட வளர்ச்சிப் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.



இந்த பணிகளை தாராபுரம் சட்டமன்ற உறுப்பினரும், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சருமான கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினர்.

இந்நிகழ்ச்சியில் தாராபுரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் செந்தில்குமார் மற்றும் துணைத் தலைவர் சசிகுமார் திமுக இளைஞரணி அமைப்பாளர் சன் பாலு உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...