தாராபுரத்தில் ரூ.1.07 கோடி மதிப்பிலான வளர்ச்சித்திட்ட பணிகளுக்கான பூமி பூஜை - அமைச்சர் கயல்விழி பங்கேற்பு!

தாராபுரம் தொகுதிக்கு உட்பட்ட சின்னக்கம்பாளையம், கொட்டமுத்தம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.1.07கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அடிக்கல் நாட்டினார்.



திருப்பூர்: தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் ரூ.1.07 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அமைச்சர் கயல்விழி அடிக்கல் நாட்டினார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சின்னக்கம்பாளையம், கொட்டமுத்தம்பாளையம் கிராமங்களில் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் நியாய விலை கடை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை, சீலநாயக்கன்பட்டியில் இருந்து தார்ச்சாலை அமைக்க ரூ.50 லட்சம் மதிப்பிலான பணிக்குப் பூமி பூஜை நடைபெற்றது.



அதைத் தொடர்ந்து குருவப்ப நாயக்கன் பாளையம் பகுதியில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய நலக்கூடம், தாராபுரம் வசந்தம் நகர் பகுதியில் ஊராட்சி ஒன்றிய மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 13.50 லட்சம் மதிப்பில் தார்ச் சாலை என மொத்தம் ரூ.1.07 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்ட வளர்ச்சிப் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.



இந்த பணிகளை தாராபுரம் சட்டமன்ற உறுப்பினரும், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சருமான கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினர்.

இந்நிகழ்ச்சியில் தாராபுரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் செந்தில்குமார் மற்றும் துணைத் தலைவர் சசிகுமார் திமுக இளைஞரணி அமைப்பாளர் சன் பாலு உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...