கோவை சூலூர் அருகே வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க லஞ்சம் கேட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் கைது!

சூலூர் அடுத்த சுல்தான்பேட்டை பகுதியில் இட பிரச்னை தொடர்பாக வழக்குபதியாமல் இருக்க ரூ.4,000 லஞ்சம் வாங்கிய சிறப்பு உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரனை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.



கோவை: கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை அருகே வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க லஞ்சம் கேட்ட சிறப்பு உதவி ஆய்வாளரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்துள்ளனர்.

சூலூர் அடுத்த சந்தமநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியம் என்பவரின் மகன் பஞ்சலிங்கம். இவருக்கும் அதே ஊரை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் மற்றும் அவரது அம்மா தனலட்சுமி எனபவருக்கும் கடந்த 22ஆம் தேதி மாலை டிப்பர் லாரி நிறுத்துவது சம்மந்தமாக வாய்தகராறு ஏற்பட்டுள்ளது.

இதன் பின்னர் பஞ்சலிங்கத்தின் தந்தை சுப்பிரமணியம் தனலட்சுமி வீட்டிற்கு சென்று கேட்டுள்ளார். அப்போது பஞ்சலிங்கம் தந்தையை சமாதானபடுத்தி அழைத்து வந்துள்ளார்.

இந்நிலையில் மறுநாள் சுல்தான்பேட்டை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் பஞ்சலிங்கத்தை செல்போனில் அழைத்து ஜெயபிரகாஷ் என்பவர் புகார் கொடுத்திருப்பதாகவும், விசாரிக்க வேண்டும் என கூறி காவல் நிலையம் வரச்சொல்லியுள்ளார்.

அப்போது அங்கு சென்ற அவரை உள்ளே உட்கார வைத்து விட்டு தன்மேல் முதல் தகவல் அறிக்கை போடாமல் அவர்களிடம் சமாதானமாக பேசி வெறும் CSR மட்டும் போட்டு தன்னை விடுவிப்பதாகவும் அதற்கு தன்னை கவனிக்குமாறு சிறப்பு உதவி ஆய்வாளர் கூறியுள்ளார்.

பின்னர் பஞ்சலிங்கம் ஊர்காரர்கள் மூலம் பேசி சமாதானமாக போவதாக எழுதி கொடுத்து விட்டு காவல் நிலையத்திற்கு வெளியே வரும்போது சிறப்பு உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் அவரை அழைத்து FIR போடாமல் CSR மட்டும் போட்டு தன்னை காப்பாத்தி உள்ளதாக கூறி, அதற்கு ரூ.5000 பணம் கொடுக்க சொல்லி கேட்டுள்ளார். அதற்கு தனக்கு மனசு சரியில்லை என்றும் மாலை வந்து பார்ப்பதாக சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார்.

இந்நிலையில், அடுத்தடுத்து பணம் கேட்டு தொல்லை செய்ததால், கோவை லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அளித்த ஆலோசனையின் படி, பஞ்சலிங்கம் சிறப்பு உதவிஆய்வாளர் ரவிச்சந்திரனை சந்திக்க சென்றுள்ளார்.

காவல் நிலையத்தின் அருகேயுள்ள கருப்பராயன் கோவில் முன்பு வரச்சொல்லி லஞ்சமாக ரூ.4,000 வாங்கியபோது, அங்கு மறைந்திருந்த கோவை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசார், SSI ரவிச்சந்திரனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...