கோவையில் மனித-விலங்கு மோதலை தடுக்க 15 நாட்களுக்கு ஒருமுறை கூட்டம் நடத்த முடிவு!

பெரியநாயக்கன்பாளையம் அடுத்த பூச்சியூர் பகுதியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது குறித்து தொடர்பான ஆட்சியர் தலைமையில் வனத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு ஆலோசனை கூட்டத்தில், 15 நாட்களுக்கு ஒருமுறை கூட்டம் நடத்தி நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு.



கோவை: கோவையில் மனித - விலங்கு மோதலை தடுக்க 15 நாட்களுக்கு ஒரு முறை கூட்டம் நடத்தி நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.



பெரியநாயக்கன்பாளையம் அருகேயுள்ள பூச்சியூர் பகுதியில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழந்தது.

இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கோவை மாவட்டம், பெரியநாயக்கன் பாளையம் வனச்சரகம், நாயக்கன்பாளையம் தெற்கு சுற்று, தடாகம் காப்புக்காட்டிற்கு வெளியே சுமார் ஒரு கி.மீ. தொலைவில் கூடலூர் தெற்கு வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட பட்டா நிலத்தில் இருந்த மின்கம்பத்தில் இன்று காலையில் சுமார் 25 வயதுடைய ஆண் யானை ஒன்று தலையை வைத்து உரசிய போது கம்பம் உடைந்து சரிந்ததில், மின் கம்பிகள் யானை மீது விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து யானை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.



இந்நிகழ்வினை தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வன அலுவலர், மாவட்ட வருவாய் அலுவலர், மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர்கள் (வடக்கு மற்றும் தெற்கு) ஆகியோர் கலந்து கொண்ட கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. கூட்டத்தில் மின்சாரம் தாக்கி யானை இறப்பதை தடுப்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டு கீழ்காணும் வழிமுறைகளை பின்பற்றுவது என முடிவு செய்யப்பட்டது.

வனப்பகுதியை ஒட்டிய 1 கி.மீ. முதல் அதிகபட்சமாக 5 கி.மீ. சுற்றளவு கொண்ட பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் உள்ள பகுதிகளை வரைப்படங்களில் வரையறுத்து அப்பகுதியில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், பழுதடைந்த மின்கம்பங்களை கண்டறிந்து உடன் சரிசெய்தல்.

மேலும், இவ்வாறான நிகழ்வுகள் ஏற்படாமல் தடுக்க வனங்களை ஒட்டிய பகுதிகளில் உயர் மின்கம்பங்கள் அமைத்தல், காப்பிடப்பட்ட மின்கம்பிகளை பயன்படுத்துதல், மின்கம்பங்களை சுற்றி தடுப்பு வேலிகள் அமைத்தல் போன்ற வழிமுறைகளை வகுத்து தொலைநோக்கு தொலைநோக்கு நடவடிக்கை மேற்கொள்வது.

வனத்துறை மற்றும் மின்வாரிய பணியாளர்களுடன் காப்புக்காட்டை ஒட்டிய பகுதிகளில் மின் வேலிகள் மற்றும் மின்கம்பிகள் ஆய்வு செய்ய கூட்டு புலத்தணிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இக்கூட்டுப்புலத்தணிக்கையினை தொடர்ந்து மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது.

மேலும், மின்சாரம் தாக்கி யானை இறப்பதை தடுப்பது மற்றும் மனித-வனவிலங்கு முரண்பாடுகளை தவிர்ப்பதை குறித்து வருவாய் வட்ட அளவில் வட்டாச்சியர், வனச்சரக அலுவலர், காவல் ஆய்வாளர் மற்றும் மின்வாரிய அலுவலர்கள் 15 நாட்களுக்கு ஒரு முறை கூட்டம் நடத்தி நடவடிக்கைகள் மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...