தென்னம்பாளையத்தில் திருப்பூர் மேற்கு எம்.எல்.ஏ செல்வராஜ் ஆய்வு - அதிகாரிகளுக்கு எச்சரிக்கை!

தென்னம்பாளையம் அருகேயுள்ள டி.எம்.சி காலனியில் ஆய்வு மேற்கொண்ட திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், பொதுமக்களின் அடிப்படை பிரச்சனைகளில் கவனம் செலுத்தாவிட்டால் சட்டமன்றத்தில் பேசி இடமாற்றம் செய்ய நேரிடும் என அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தென்னம்பாளையம் அருகே ஆய்வு மேற்கொண்ட எம்.எல்.ஏ செல்வராஜ், அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

பல்லடம் சாலை தென்னம்பாளையம் அடுத்த டி.எம்.சி காலனியில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில் நேற்று திருப்பூர் மாவட்டத்தில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழையின் காரணமாக அப்பகுதி குடியிருப்புகளுக்குள் மழை நீரோடு சாக்கடை நீரும் சேர்ந்து புகுந்தது.

இதன் காரணமாக அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக தீர்வு காண வேண்டும் என கோரிக்கை வைத்த நிலையில் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் ஆகியோர் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் தூய்மை பணியாளர்கள் குடியிருக்கும் இப்பகுதியில் அதிகாரிகள் அலட்சியப் போக்குடன் செயல்படுவதாக தெரிவித்தார்.



மேலும் ஊர் முழுவதும் சுத்தம் செய்யும் தொழிலாளர்கள் குடியிருக்கும் பகுதியை அதிகாரிகள் வேண்டுமென்றே புறக்கணிப்பது போல் தோன்றுவதாகவும் இதே நிலை நீடித்தால் அதிகாரிகளின் அலட்சிய போக்கு குறித்து சட்டமன்றத்தில் பேசி இடமாற்றம் செய்ய நேரிடும் என எச்சரிக்கை விடுத்தார்.

இனியும் இதுபோன்று குடியிருப்பு பகுதிக்குள் மழைநீர் செல்லாதவாறு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...