ஆஸ்கர் தம்பதியுடன் கொஞ்சி விளையாடும் தர்மபுரி குட்டியானை - வைரல் வீடியோ!

தர்மபுரியில் கிணற்றில் இருந்து இருந்து மீட்கப்பட்ட நான்கு மாத குட்டியானையை, முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் ஆஸ்கர் தம்பதியான பொம்மன் - பெள்ளி இருவரும் பராமரித்து வருகின்றனர். குட்டியானையோடு தம்பதி கொஞ்சி விளையாடும் வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.



நீலகிரி: தர்மபுரியில் யானை கூட்டத்திலிருந்து பிரிந்த குட்டி யானை 40 அடி ஆழ கிணற்றில் விழுந்தது. நீண்ட போராட்டத்துக்குப் பின் வனத்துறையினர், அந்த குட்டி யானையை மீட்டனர்.

பின்பு ஒரு வார காலமாக வனத்துறையினர் குட்டியை பாதுகாத்து வந்த நிலையில், தாய் யானையுடன் சேர்க்கும் முயற்சியிலும் ஈடுபட்டனர்.

இந்த முயற்சி பலனளிக்காத நிலையில், குட்டி யானையை நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் முகாமிற்கு கொண்டு செல்ல வனத்துறை முடிவு செய்தனர்.

அதன்படி, கடந்த 17ஆம் தேதி முதுமலை யானைகள் முகாமிற்க்கு கொண்டு வந்தனர். இந்த குட்டி யானையை "தி எலிபன்ட் விஸ்பரர்ஸ்" திரைப்படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி ஆகிய இருவரும் பராமரிக்க அரசு உத்தரவிட்டது.



அதன்படி ஒப்படைக்கப்பட்ட அந்த குட்டி யானை ஆஸ்கார் விருது தம்பதியுடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை வனத்துறை செயலர் சுப்ரியா சாகு டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.



இந்த வீடியோ தற்போது வைரலாகப் பரவிவருகிறது.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...