கோவை அருகே மின்கம்பத்தை மோதி உடைத்த காட்டுயானை - மின்சாரம் தாக்கி பரிதாப பலி!

கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தை அடுத்த ராவுத்துக்கொள்ளனூர் பகுதியில் மின் கம்பத்தில் மோதிய ஆண் காட்டுயானை ஒன்று மின்சாரம் பாய்ந்து பலியானது. கால்நடை மருத்துவர்களை வரவழைத்து உடற்கூறாய்வு மேற்கொள்ள உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.



கோவை: கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தை அடுத்து ராவுத்துக்கொள்ளனூர் பகுதியில் இன்று அதிகாலை ஆண் காட்டு யானை ஒன்று மின்சாரம் தாக்கி இறந்து கிடப்பதாக பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.



அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த உதவி வனப்பாதுகாவலர் செந்தில் தலைமையிலான பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினர் இறந்து கிடந்த யானையை பரிசோதித்தனர்.



அதில், இன்று காலை சுமார் 7 மணி அளவில் உணவு தேடி வந்த ஆண் காட்டு யானை ஒன்று அவ்வழியாக சென்றபோது மின் கம்பத்தில் மோதி உள்ளது.



அப்போது மின்கம்பம் உடைந்து யானை மீது விழுந்ததில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே யானை பரிதாபமாக பலியானது தெரியவந்தது.



இதையடுத்து, கால்நடை மருத்துவர்களை வரவழைத்து உடற்கூறாய்வு மேற்கொள்ள உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.



மின்சாரம் தாக்கி காட்டு யானை பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...