கோவையில் அயர்னிங் கடையில் பாய்லர் வெடித்து விபத்து - போக்குவரத்து பாதிப்பு

கோவை சிங்காநல்லூரில் உள்ள தனியார் வணிக வளாக மாடியில் ஸ்டீமிங் முறையில் துணிகளை அயர்ன் செய்யும் கடையில் பாய்லர் வெடித்து பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.



கோவை: கோவை சிங்காநல்லூர் சிக்னல் அருகே மகாதேவ் எலக்ட்ரிக்கல் என்ற கடை அமைந்துள்ள மாடியில் ஸ்டீமிங் முறையில் துணியில் அயர்ன் செய்து கொடுக்கும் கடை இயங்கி வருகிறது.



இந்த கடையில் ஸ்டீமிங் செய்வதற்காக வைத்திருந்த பாய்லர் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. மளமளவென பரவிய தீ குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.



அதற்குள் உள்ளே இருந்த துணிகள் முற்றிலுமாக தீயில் எரிந்து நாசமானது.



திருச்சி பிரதான சாலையோரத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்தால், அங்கு சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தீ விபத்து ஏற்படும்போது உள்ளே ஆட்கள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...