கோவையில் அயர்னிங் கடையில் பாய்லர் வெடித்து விபத்து - போக்குவரத்து பாதிப்பு

கோவை சிங்காநல்லூரில் உள்ள தனியார் வணிக வளாக மாடியில் ஸ்டீமிங் முறையில் துணிகளை அயர்ன் செய்யும் கடையில் பாய்லர் வெடித்து பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.



கோவை: கோவை சிங்காநல்லூர் சிக்னல் அருகே மகாதேவ் எலக்ட்ரிக்கல் என்ற கடை அமைந்துள்ள மாடியில் ஸ்டீமிங் முறையில் துணியில் அயர்ன் செய்து கொடுக்கும் கடை இயங்கி வருகிறது.



இந்த கடையில் ஸ்டீமிங் செய்வதற்காக வைத்திருந்த பாய்லர் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. மளமளவென பரவிய தீ குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.



அதற்குள் உள்ளே இருந்த துணிகள் முற்றிலுமாக தீயில் எரிந்து நாசமானது.



திருச்சி பிரதான சாலையோரத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்தால், அங்கு சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தீ விபத்து ஏற்படும்போது உள்ளே ஆட்கள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...